$user_name="Jeyakumar";

Wednesday, April 26, 2006

பேராயரின் பேராசை!



ஒரு கிறிஸ்த்தவப் பேராயர், எதோ ஒரு வட்டச்செயலாளர் மாதிரி இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கலாமா? . அதுவும் சமூக நீதி இயக்கம் என்ற பெயரில்.

ஏழை எளிய மக்களை ஆசை காட்டி மதம்மாறச்செய்து , அந்த கணக்கை காட்டி வெளிநாடுகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்துவிட்டு பிறகு அவர்களை நட்டாத்தில் விட்டுவிட்டு செல்லும் உங்களுடைய செய்கைகளை தடை செய்ய ஜெ. சட்டம் கொண்டுவந்தார் என்பதற்காக இப்படியா?


தேர்தல் விதிகளை மீறி , தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கருணாநிதி டிவி வழங்கினார், அரிசி வழங்கினார், நிலங்களை வாக்களர்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் என்று வழக்குப்போட விருப்புவோர் , போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு இதோ புகைப்பட ஆதாரத்தை பேராயர் பெருந்தகை "எஸ்றா" உங்களுக்கு இலவசமாக வளங்கியுள்ளார்.

44 Comments:

At 5:34 PM, Blogger மாயவரத்தான் said...

இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஜெயக்குமார். மதுரை ஆதினம் செய்யலாம், எஸ்ரா செய்யக் கூடாதா? (சங்கராச்சாரியாரை இழுக்க இப்போ நாலஞ்சு ஓடி வருவாங்க பாருங்க!) எஸ்ராவின் சார்புத்தன்மை எல்லாருக்கும் தெரிந்தது தான். அவர் போய் ஓட்டுப் போடுங்க என்று சொல்வதினால் அப்படியே ஓடிப் போய் ஒருவரும் ஓட்டுப் போடப் போவதில்லை.

 
At 6:24 PM, Blogger oosi said...

அதிமுக-விற்கு ஒரு ஆதினம் , திமுக-விற்கு ஒரு யெஸ்றா. :-)

 
At 8:18 PM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

துட்டு சாமீ... துட்டு..
:(

 
At 9:01 PM, Blogger ப்ரியன் said...

/*
ஒரு கிறிஸ்த்தவப் பேராயர், எதோ ஒரு வட்டச்செயலாளர் மாதிரி இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கலாமா? . அதுவும் சமூக நீதி இயக்கம் என்ற பெயரில்.
*/
அவர் கிறிஸ்த்தவப் பேராயர் மட்டுமல்ல..."சமூக நீதி இயக்கத்தில்" இருக்கிறார்...அப்படி ஒரு இயக்கம் இருப்பது பாவம் உங்களுக்கு தெரியாது போலும்...

/*
ஏழை எளிய மக்களை ஆசை காட்டி மதம்மாறச்செய்து , அந்த கணக்கை காட்டி வெளிநாடுகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்துவிட்டு பிறகு அவர்களை நட்டாத்தில் விட்டுவிட்டு செல்லும் உங்களுடைய செய்கைகளை தடை செய்ய ஜெ. சட்டம் கொண்டுவந்தார் என்பதற்காக இப்படியா?
*/

ஓ ஹோ!இந்து மக்களைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர்தாம் அம்மா...?இல்லையா?எந்த தாழ்த்தப் பட்டரோரும் தங்களுக்கான மரியாதை கிடைக்கவில்லை என கிறுத்துவத்திற்கோ அல்லது இஸ்லாமியத்திற்கோ மாறவில்லை இல்லையா?

/*
தேர்தல் விதிகளை மீறி , தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கருணாநிதி டிவி வழங்கினார், அரிசி வழங்கினார், நிலங்களை வாக்களர்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் என்று வழக்குப்போட விருப்புவோர் , போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு இதோ புகைப்பட ஆதாரத்தை பேராயர் பெருந்தகை "எஸ்றா" உங்களுக்கு இலவசமாக வளங்கியுள்ளார்.
*/

தலைவா நீங்கள் M.C.A படித்துதானே பாஸ் பண்ணீங்க??இல்ல தெரியாமதான் கேக்குறேன் அது கிராபிக்ஸ் படம்னு எல் கே ஜி பையன் கூட அழகா சொல்லிடுவானே...

கடைசியாக அ.தி.மு.க விற்காக ஒரு இந்து ஆதீனம் பார்வேட் பிளாக்கை மிரட்டலாம் ஆனால் இரு கிருத்துவ பேராயர் தி.மு.க விற்கு ஆதரவாக விளம்பரம் கூட கொடுக்க கூடாது என்னப்பா நியாயம்

முதலில் உங்கள் பார்வையை நேர்மையாக்குங்கள் வெறுமனே தி.மு.க வையும் தி.மு.க வை அதரிப்பவர்களையும் வைய்யாதீர்...நியாயம் எந்தப் பக்கம் என்று பார்த்து பதிவிடுங்கள் நடுநிலைமையில் இருந்தால் இன்னமும் சந்தோசம்

தலைவா சிறுபான்மையினர் கூட்டமைப்பு விபரங்களுக்கு

http://tamilmuslim.blogspot.com/2006_03_01_tamilmuslim_archive.html

http://www.tmmkonline.org/tml/home.htm

 
At 9:17 PM, Anonymous Anonymous said...

HH Sankarachariar had openly advertised/advised his community memmbers to vote for Jayalalitha in 1989. If that was right, there is nothing wrong in this also. Perhaps you think that it can be done only by selected few.

 
At 10:07 PM, Blogger பிரதீப் said...

இதில வழக்குப் போடுறதுக்கான ஆதாரம் என்ன ருக்குன்னு நிஜமாவே புரியலீங்கோ...

டிவி குடுக்குற மாதிரி ஒட்டுப்ப் ஓட்டு போட்டோ எடுத்தா அது விதிமுறை மீறலா?

 
At 10:55 PM, Blogger ஜோ/Joe said...

//தேர்தல் விதிகளை மீறி , தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கருணாநிதி டிவி வழங்கினார், அரிசி வழங்கினார், நிலங்களை வாக்களர்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் என்று வழக்குப்போட விருப்புவோர் , போட்டுக்கொள்ளலாம்.//

ஏன் நீர் அந்த வழக்கை போட வேண்டியது தானே!உம்மைப் பார்த்து இந்த வலைப்பதிவுலகம் சிரிப்பது மாதிரி நீதி மன்றமும் சிரிப்பாய் சிரிக்கட்டுமே!

 
At 10:57 PM, Blogger ஜெயக்குமார் said...

//அண்ணாச்சி:
எஸ்றாவை கவனிச்சு பதிவு போடறீங்க, மதுரை ஆதீனத்தை கண்டுக்காம விட்டுட்டீங்களே. ஏஏஏஏஎஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்...........//

நான் ஏற்கனவே, குமுதத்தில் வெளிவந்த ஆதினத்தில் அரசில் என்ற பதிவை என்னுட்டைய இடுக்கையில் வெளியிட்டு இருந்ததை படிக்கவில்லையென்றால் அதற்கு நான் என்ன பண்ணமுடியும்.

//அவர் கிறிஸ்த்தவப் பேராயர் மட்டுமல்ல..."சமூக நீதி இயக்கத்தில்" இருக்கிறார்...அப்படி ஒரு இயக்கம் இருப்பது பாவம் உங்களுக்கு தெரியாது போலும்...//

இன்னும் ஒரு முறை இந்த பதிவை படித்தீர்கள் என்றால் அதை நான் குறிப்பிட்டு இருந்தது உங்களுக்கு தெரியும்.

//டிவி குடுக்குற மாதிரி ஒட்டுப்ப் ஓட்டு போட்டோ எடுத்தா அது விதிமுறை மீறலா?//

இதை நான் நக்கலாகத்தான் சொன்னேன். ஆட்சிக்கு வருவதற்குள் இப்படியெல்லாம் போஸ்டர் அடிக்கனுமா?. ராசுக்குட்டி படத்துல பாக்கியராஜ் , டாக்டரா, வக்கீலா , போலிஸ் அதிகாரிய படம் எடுத்து வீட்டுல போட்டமாதிரி.

 
At 11:11 PM, Blogger ரவி said...

எஸ்ரா சர்க்குணம் னு ஒருத்தர் இருக்கரதே, சிறுபாண்மை மக்கள் அவங்க பக்கம் இருக்காங்கன்னு சீன் போடத்தான்...

உண்மைய சொன்னா தமிழக கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அறிமுகமே இல்லாதவர் இந்த எஸ்ரா...

 
At 11:13 PM, Blogger ஜெயக்குமார் said...

ஆதீனமும், சங்கரச்சாரியாரும் , சில முஸ்லிம் மத குருமார்களும் சில கட்சிகளை ஆதரித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

எனக்கு தெரிந்து யாரும் இதுபோல பிரச்சார ரதமெல்லாம் விட்டதில்லை. அப்படி யாராவது செய்திருந்தால், உங்கள் பிண்ணூட்டங்களிம் ஆதாரத்துடன் குறிப்பிடலாம்.

 
At 11:22 PM, Blogger ஜெயக்குமார் said...

//
ஏன் நீர் அந்த வழக்கை போட வேண்டியது தானே!உம்மைப் பார்த்து இந்த வலைப்பதிவுலகம் சிரிப்பது மாதிரி நீதி மன்றமும் சிரிப்பாய் சிரிக்கட்டுமே!//

என்ன ஜோ, நீங்களும் ராசுக்குட்டி மாதிரி பட்டம் வாங்கியவாரா?
அல்லது விளம்பரப்பிரியரா?

நான் இந்த வழக்கு விசயத்தை குறிப்பிட்டது ஜெயிப்பதற்கு முன்னரே குடுத்தது மாதிரி இப்படி விளம்ப்பரம் தேவையா? என்று ஒரு நக்கலுக்காகத்தான். அதை பார்த்து உங்களுக்கு கோபம் வருதென்றால் நீங்களும் நான் மெற்சொன்னவர் மாதிரி தானோ?

 
At 11:25 PM, Blogger ப்ரியன் said...

நீங்கள் : ஒரு கிறிஸ்த்தவப் பேராயர், எதோ ஒரு வட்டச்செயலாளர் மாதிரி இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கலாமா? . அதுவும் சமூக நீதி இயக்கம் என்ற பெயரில்.

நான் : அவர் கிறிஸ்த்தவப் பேராயர் மட்டுமல்ல..."சமூக நீதி இயக்கத்தில்" இருக்கிறார்...அப்படி ஒரு இயக்கம் இருப்பது பாவம் உங்களுக்கு தெரியாது போலும்...

நீங்கள் : இன்னும் ஒரு முறை இந்த பதிவை படித்தீர்கள் என்றால் அதை நான் குறிப்பிட்டு இருந்தது உங்களுக்கு தெரியும்.

குறிப்பிட்டு இருக்கிறீர்கள் இல்லை ஆனால் குறிப்பிட்ட விதம் தவறு

அதுவும் சமூக நீதி இயக்கம் என்ற பெயரில்.

சமூக நீதி இயக்க எஸ்றா சற்குணம்என்பதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு ஜெயா (சுருக்கமாகத்தான்)

 
At 11:42 PM, Blogger ஜோ/Joe said...

//அதை பார்த்து உங்களுக்கு கோபம் வருதென்றால் நீங்களும் நான் மெற்சொன்னவர் மாதிரி தானோ?//

கோபம் வருகிறதா? தமாசு தான் போங்கள்! கோபம் வருகிற அளவுக்கு சீரியஸாக எழுதுவதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது கண்டு சிரிப்பு தான் வருகிறது ..வலைபதிவுலகில் எங்களை சிரிக்க வைப்பது போல வக்கீல்களையும் சிரிக்க வைத்தால் நல்லது தானே என்று சொன்னேன்! ஹி..ஹி..தொடருங்கள் உங்கள் காமெடியை!

 
At 11:44 PM, Blogger ஜோ/Joe said...

//உண்மைய சொன்னா தமிழக கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அறிமுகமே இல்லாதவர் இந்த எஸ்ரா... //
ரவி,
அவர் கத்தோலிக்கருமல்ல .கத்தோலிக்கர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருத்தில் தான் சொல்கிறீர்கள் என நம்புகிறேன்.

 
At 11:54 PM, Blogger ப்ரியன் said...

படத்தின் கீழ் "

பேராயர் சற்குணத்தின் இந்திய சமூக நீதி இயக்கம் திமுக அணியை ஆதரித்து பிரசார ரதம் ஒன்றை உருவாக்கி உள்ளது.இதில் திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் குறித்த பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதை திமுக தலைவர் கொடி அசைத்து நேற்று தொடங்கிவைத்தார்"

என்றுதானே உள்ளது?

மற்றப்படி ஏதும் இல்லையே பா ஜெயா

 
At 12:05 AM, Blogger Bharaniru_balraj said...

இதையாச்சும் சாதாரண்மா விட்டுரலாம். ஆனால் ஜெயலலிதாவ கன்னி மேரியாக்வே சித்தரித்தார்களே. அது நியாயமா?.

 
At 12:11 AM, Blogger ப்ரியன் said...

/*
என்ன ஜோ, நீங்களும் ராசுக்குட்டி மாதிரி பட்டம் வாங்கியவாரா?
அல்லது விளம்பரப்பிரியரா?
*/

அவர் விலம்பரப் பிரியரும் இல்லை ராசுக்குட்டியும் இல்லை.அவர் பதிவு ஒன்றையாவது என்றாவது படித்திருக்கிறீர்களா?

/*
வலைப்பதிவுலகம் சிரிப்பது மாதிரி நீதி மன்றமும் சிரிப்பாய் சிரிக்கட்டுமே!*/

தமிழ்மணத்தில் இருக்கும் அன்பர்களின் மனதில் தோன்றியதை அவர் பதித்திருக்கிறார் அவ்வளவே...

அவருக்கு கோபம் இல்லை உங்களுக்குத்தான் கோபம் வருகிறது...

முதலில் சசியின் சன் டிவி மோகம் என்று ஒரு பதிவு போட்டீர்கள் இப்போது ஜோ வை ஏசுகிறீர்

மன்னிக்க...என்னைக் கேட்டால் உங்களைப் பார்த்தால்தான் விளம்பரப் பிரியர் போல தோன்றுகிறது

எல்லோரும் வலைப்பதிவது அவரவர் கருத்தைச் சொல்லத்தான் அடுத்தவரை வார்த்தைகளால் புண்படுத்த அல்ல மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

 
At 1:21 AM, Blogger ஜெயக்குமார் said...

//கோபம் வருகிறதா? தமாசு தான் போங்கள்! கோபம் வருகிற அளவுக்கு சீரியஸாக எழுதுவதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது கண்டு சிரிப்பு தான் வருகிறது ..வலைபதிவுலகில் எங்களை சிரிக்க வைப்பது போல வக்கீல்களையும் சிரிக்க வைத்தால் நல்லது தானே என்று சொன்னேன்! ஹி..ஹி..தொடருங்கள் உங்கள் காமெடியை!//

இந்த பதிவு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உங்களைபோன்றோரிடம் இருந்துவரும் பிண்ணூடங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

உங்கள் சிரிப்பு "வசூல் ராஜா எம்.பி.பி.ஸ்" படத்தில் பிரகாஷ்ராஜின் சிரிப்பை ஞாபகப்படுத்துகிறது.

கீழ்ப்பாக்கம் போகாமல் இருந்தால் சரி.

//தமிழ்மணத்தில் இருக்கும் அன்பர்களின் மனதில் தோன்றியதை அவர் பதித்திருக்கிறார் அவ்வளவே...//

கலைஞர் "மாறன் எனது மனச்சாட்சி" என்று கூறியது போல "ஜோ" தான் தமிழ்மணத்தின் பதிவாளர்களுக்கும் ,உங்களுக்கும் மனச்சாட்சியோ?

 
At 1:48 AM, Blogger ரவி said...

///அவர் கத்தோலிக்கருமல்ல .கத்தோலிக்கர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருத்தில் தான் சொல்கிறீர்கள் என நம்புகிறேன்.///

100 சதவீதம் சரி...யாராவது கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பரிடம் கேட்டு தான் பாருங்களேன்.. ஏன் என் கிட்ட கூட கேட்கலாம்..:)

 
At 2:02 AM, Blogger ஜெயக்குமார் said...

//மன்னிக்க...என்னைக் கேட்டால் உங்களைப் பார்த்தால்தான் விளம்பரப் பிரியர் போல தோன்றுகிறது//

எனக்கு விளம்பரம் வேண்டுமானால் "
வெளிநாடுகளிலும் பரவியுள்ள ஜெ எதிர்ப்பு அலை!"
என்று சன் டிவி, தமிழ் முரசு மற்றும் தினகரன் பத்திரிக்கைகளில் விளம்பரம் வரும் அளவிற்கு எழுத முடியும்.

உங்களுக்கு திறமையிருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

 
At 2:05 AM, Blogger ப்ரியன் said...

/*
இந்த பதிவு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உங்களைபோன்றோரிடம் இருந்துவரும் பிண்ணூடங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

உங்கள் சிரிப்பு "வசூல் ராஜா எம்.பி.பி.ஸ்" படத்தில் பிரகாஷ்ராஜின் சிரிப்பை ஞாபகப்படுத்துகிறது.

கீழ்ப்பாக்கம் போகாமல் இருந்தால் சரி.
*/

நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்

 
At 2:13 AM, Blogger ப்ரியன் said...

/*
எனக்கு விளம்பரம் வேண்டுமானால் "
வெளிநாடுகளிலும் பரவியுள்ள ஜெ எதிர்ப்பு அலை!" என்று சன் டிவி, தமிழ் முரசு மற்றும் தினகரன் பத்திரிக்கைகளில் விளம்பரம் வரும் அளவிற்கு எழுத முடியும்.
*/
எங்கே எழுதி காட்டுங்கள் ஜெயா

/*
உங்களுக்கு திறமையிருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
*/
எனக்கு விளம்பரம் வேண்டுமென்று நான் சொன்னேனா அது எனக்கு தேவை இல்லை

என் தளம் இதுவல்ல எழுத.
என் எழுது தளம் வேறு அது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

/*
என்ன ஜோ, நீங்களும் ராசுக்குட்டி மாதிரி பட்டம் வாங்கியவாரா?
அல்லது விளம்பரப்பிரியரா?
*/
என நீங்கள் ஜோ வைக் கேட்டதனாலேயே உங்களைத் திருப்பி நான் கேட்க நேர்ந்தது

ஒன்று நன்றாகப் புரிகிறது என்ன சொன்னாலும் எத்துணை ஆதாரங்களோடு அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளிக்காத விதண்ட வாதி நீங்கள் என்பது

 
At 2:29 AM, Blogger ஜோ/Joe said...

//100 சதவீதம் சரி...யாராவது கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பரிடம் கேட்டு தான் பாருங்களேன்.. ஏன் என் கிட்ட கூட கேட்கலாம்..:)//
ரவி,
அய்யயோ!நீங்கள் என்ன கோணத்தில் சொன்னீர்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன் .நானும் கத்தோலிக்கன் தான்.

ஜெயக்குமார்,
உங்கள் தனிப்பட்ட தாக்குதல்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..உங்கள் பாணியிலே தொடருங்கள்.

 
At 2:41 AM, Blogger ஜெயக்குமார் said...

//என் தளம் இதுவல்ல எழுத.
என் எழுது தளம் வேறு அது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை//

"இரும்பு அடிக்கிற இடத்தில ஈ-க்கு என்ன வேலை" என்ற பழமொழி ஞாபத்திற்கு வருகிறது.


//நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்//


"ஏன் நீர் அந்த வழக்கை போட வேண்டியது தானே!உம்மைப் பார்த்து இந்த வலைப்பதிவுலகம் சிரிப்பது மாதிரி நீதி மன்றமும் சிரிப்பாய் சிரிக்கட்டுமே! - ஜோ"

இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?.

 
At 2:50 AM, Blogger ஜோ/Joe said...

பிரியன்,
ஜெயக்குமார் அவர்கள் ஒரு முடிவோடு இருக்கிறார் .அவரிடம் குறைந்த பட்ச தர்க்க அடிப்படையக் கூட காண முடியவில்லை .இதில் போய் விவாதிப்பது மடமை..முடிந்தால் அவர் எழுதுவதை படித்து சிரித்து விட்டு போகலாம்.

 
At 2:51 AM, Blogger ப்ரியன் said...

/*
ஜோ :
"ஏன் நீர் அந்த வழக்கை போட வேண்டியது தானே!உம்மைப் பார்த்து இந்த வலைப்பதிவுலகம் சிரிப்பது மாதிரி நீதி மன்றமும் சிரிப்பாய் சிரிக்கட்டுமே! -
*/

இது உங்களின் எழுத்துக்களைக் குறிக்கின்றனவே அன்றி உங்களை அல்லவே

ஆனால்
/*
என்ன ஜோ, நீங்களும் ராசுக்குட்டி மாதிரி பட்டம் வாங்கியவாரா?
அல்லது விளம்பரப்பிரியரா?

நான் இந்த வழக்கு விசயத்தை குறிப்பிட்டது ஜெயிப்பதற்கு முன்னரே குடுத்தது மாதிரி இப்படி விளம்ப்பரம் தேவையா? என்று ஒரு நக்கலுக்காகத்தான். அதை பார்த்து உங்களுக்கு கோபம் வருதென்றால் நீங்களும் நான் மெற்சொன்னவர் மாதிரி தானோ?
*/
இது கண்டிப்பாக தனிமனித தாக்குதல்

 
At 3:02 AM, Blogger ஜெயக்குமார் said...

//
இதையாச்சும் சாதாரண்மா விட்டுரலாம். ஆனால் ஜெயலலிதாவ கன்னி மேரியாக்வே சித்தரித்தார்களே. அது நியாயமா?.
//

இவைகள் எல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள் தான். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமே இல்லை. ஆனால், அப்படி செய்தவர்கள் ஜெ-யின் அடிப்பொடிகள், மத குருமார்களோ அல்லது மதத்தலைவர்களோ அல்ல. ஆனால் இங்கே இதை செய்தவரின் பதவியும் தகுதியும் தான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கச்செய்துள்ளது.

 
At 3:06 AM, Blogger ப்ரியன் said...

தளம் என்பதன் அர்த்ததினை சரியாக நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்

என் எழுது தளம் இதுவல்ல என்றால் என் எழுத்து வடிவம் இதுவல்ல என்று பொருள்

/*"இரும்பு அடிக்கிற இடத்தில ஈ-க்கு என்ன வேலை" என்ற பழமொழி ஞாபத்திற்கு வருகிறது.*/

குற்றமில்லை ஜெயா எழுதுபவன் மட்டும்தான் வாசகனாக இருக்க வேண்டுமென்றால் இங்கே எவனுக்கும் புத்தகமும் விற்காது வலைப்பதிவில் Counter - யும் ஏறாது...நல்ல வாசகனாய் இருப்பவன் மட்டுமே நல்ல எழுத்தாளன் ஆகிறான் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

 
At 3:09 AM, Blogger ப்ரியன் said...

/*
இதில் போய் விவாதிப்பது மடமை..முடிந்தால் அவர் எழுதுவதை படித்து சிரித்து விட்டு போகலாம்.
*/
அதுதான் சரி ஜோ

 
At 3:57 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஏன் நீர் அந்த வழக்கை போட வேண்டியது தானே!உம்மைப் பார்த்து இந்த வலைப்பதிவுலகம் சிரிப்பது மாதிரி நீதி மன்றமும் சிரிப்பாய் சிரிக்கட்டுமே!//

ஜோ-வின், இந்த பிண்ணுட்டம் தான் என் மீதான அவரின் நேரடித்தாக்குதலாக கருதத்தோன்றியது.

ஆனால் இதைப்பற்றி யாரும் எந்தக்கருத்தும் தெரிவிக்காத நிலையில்

மிக்க மகிழ்ச்சி!

தப்பை, தவறு என்றுகூட ஒத்துக்கொள்ளாதவர்களிடம் விவாதம் செய்வது தப்பான செயல் என்று எனது தவறை உணரச்செய்ததுக்கு நன்றி.

 
At 4:32 AM, Blogger ப்ரியன் said...

/*
தப்பை, தவறு என்றுகூட ஒத்துக்கொள்ளாதவர்களிடம் விவாதம் செய்வது தப்பான செயல் என்று எனது தவறை உணரச்செய்ததுக்கு நன்றி.
*/

இதை நீங்கள் சொல்கிறீர் :) ம்ம்ம்

 
At 4:32 AM, Blogger ப்ரியன் said...

/*
தப்பை, தவறு என்றுகூட ஒத்துக்கொள்ளாதவர்களிடம் விவாதம் செய்வது தப்பான செயல் என்று எனது தவறை உணரச்செய்ததுக்கு நன்றி.
*/

இதை நீங்கள் சொல்கிறீர் :) ம்ம்ம்

 
At 7:39 AM, Blogger Muthu said...

mayavarathan

(சங்கராச்சாரியாரை இழுக்க இப்போ நாலஞ்சு ஓடி வருவாங்க பாருங்க!)

present sir

 
At 6:43 PM, Anonymous Anonymous said...

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் என்றால் உலகளாவிய அங்கீகாரமும் கட்டுப்பாடான நிர்வாகமும் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் CSI எனப்படும் புரோட்டஸ்டான்ட் கிறிஸ்தவர்களும் தான். இந்த கிறிஸ்தவ அமைப்புகள் நீங்கள் குறிப்பிடுவது மாதிரி எங்கும்

//ஏழை எளிய மக்களை ஆசை காட்டி மதம்மாறச்செய்து , அந்த கணக்கை காட்டி வெளிநாடுகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்துவிட்டு பிறகு அவர்களை நட்டாத்தில் விட்டுவிட்டு செல்லும் //

இம்மாதிரி செய்வதில்லை.

உண்மையான கிறிஸ்தவர்களை புண்படுத்தும் விதமாக மதமாற்ற தடைச்சட்டம் இருந்ததால் தான் அதை அவர்கள் எதிர்த்தார்கள். பிஜேபியும் சங்க பரிவாரங்களும் பேசுவதை வைத்து உங்களைப் போன்றவர்களும் பேசி வருகிறீர்கள். மேலே காணும் நன்கொடை மோசடி கிறிஸ்தவ அமைப்புகள் செய்வதல்ல. மாறாக தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில புல்லுருவிகள் (அவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்.) செய்வதுதான். இப்போது ஏராளமான இந்து அமைப்புகளும் இதே மோசடியை செய்து வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகள் வசூலிப்பதை அறிவீர்களா?

மக்கள் மதம் மாறுவதற்கு பல்வேறு சமூகக் காரணங்கள் உள்ளன. அதனால்தான் மதமாற்ற தடைச்சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தபோது பிஜேபி தவிர சாதி மத பேதமின்றி அனைவரும் அதை எதிர்த்தார்கள். இந்து வெறியர்கள் மட்டுமே அதை ஆதரித்தார்கள். இந்து வெறியர்களைப் பொறுத்தவரை கீழ்மட்ட மக்கள் தங்களுக்கு அடிமையாகவே என்றும் வாழவேண்டுமே தவிர எந்த வகையிலும் அவர்கள் சமூக விடுதலை பெற்றுவிடக்கூடாது. இதனால்தான் பாபாசாகேப் அம்பேத்கார் தன் சமூக மக்களை புத்த மதத்திற்கு மதமாற்ம் செய்வித்தார் என்பது வரலாறு. இம்மாதிரியான மதமாற்றங்கள் தங்களின் ஆதிக்கத்தை அழித்துவிடும் என்பதால் தான் அவர்கள் அதை எதிர்த்தார்கள். பிஜேபியும் சங்க பரிவாரங்களும் அதனால்தான் மதமாற்றத்தை எதிர்க்கிறார்கள்.

பைபிளை மட்டும் மனப்பாடம் செய்து கொண்டு பிற மதங்களை இழித்துரைத்துக் கொண்டு தாங்களே உண்மையான ஆதி கிறிஸதவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில பிரிவினர் தங்களுக்குத்தாங்களே பேராயர்களையும் பாதிரிமார்களையும் பிரச்சாரகர்களையும் நியமித்துக்கொள்கிறார்கள். கிறிஸ்தவ மக்களுக்கும் இவர்களுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

எஸ்றா எனபவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய மதப்பிரிவைச் சேர்ந்தவர். அவர் கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதியோ பாதிரியாரோ அல்ல. அந்தச் சிறிய பிரிவின் பாஸ்டராக இருந்து தற்போது பேராயராக இருக்கிறார். அவர் திமுக ஆதரவாளர் என்பதால் அவருக்கு திமுக பதவி கொடுத்தது. அதனால் அவர் பேராயர் என்று பிரபலப்பட்டுக் கொண்டார். மற்றபடி உண்மையான கிறிஸ்தவ பேராயர்கள் இம்மாதிரி கீழ்த்தரமான வேலைகளில் இறங்குவதில்லை.

இன்னொரு விதத்தில் மதுரை ஆதீனத்தைக்காட்டிலும் எஸ்றா நேர்மையானவர். அவர் ரகசிய பிரச்சாரம் செய்வதில்லை. உள்வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.வெளிப்படையாகவே தான் சார்ந்த கட்சியை அறிவித்துள்ளார்.

by
Ganesh

 
At 11:13 PM, Blogger ஜெயக்குமார் said...

கனேஷ், உங்களுடைய வெளிப்படையான கருத்துகளை வரெவேற்கிரேன். இதைபற்றீ இந்த பதிவில் விவாதிக்க நினைப்பவர்கள் தங்கள் கருத்துகளை இங்கு வழங்களாம்.

 
At 5:53 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

எஸ்ரா மிகப் பெரும்பான்மையான கிருத்துவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளின் முகம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மதுரை ஆதீனம்........?

காஞ்சி மடாதிபதிக்கு நடந்ததில் ஒரு 2 அல்லது 3 சதவீதமாவது எஸ்ராவுக்கு செய்ய முடியுமா? அல்லது குறைந்த பக்ஷம் ஏழ்மையில் வாடும் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் யாருமே அறியாத ஒரு பாதிரியின் மேல் ஒரு FIRஆவது பதிவு செய்ய முடியுமா?

மதுரை ஆதீனம் பற்றி நமது பத்திரிக்கைகள் நக்கலாகவே எழுதுகின்றன. அவர் நடத்தும் ஜோக்குகளுக்கு இந்த மரியாதைதான் கிடைக்கும். ஆனால் இதுபோன்ற ஜோக்கர்கள் கிருத்துவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ இல்லையா. டென்மார்க் கார்ட்டூன் பிரச்சினையின் போது உ.பியை சேர்ந்த ஒரு மந்திரி பத்வா அறிவித்தார். ராஜ் டிவியின் காலை, மாலை நிகழ்ச்சிகளில் "ஆண்டவரை பற்றி" பிரசங்கம் செய்பவர் "கல்லையும், உருவப் பொம்மைகளையும்" வணங்கும் "காட்டுமிராண்டிகள்" "பிசாசுகளை" வழிபடுவாதாக "அன்பையும்" "அறிவையும்" புகட்டுகிறார். இது பற்றி யாராவது சொல்கிறார்களா? சொன்னால் உடனே அவருக்கு ஹிந்துத்துவவாதி என்றோ, அல்லது பார்ப்பான் என்றோ முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் நடுநிலமையானவர்கள்கூட பேச பயப்படுகிறார்கள்.

காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட போது எல்லா ஊடகங்களும் எப்படி அதை வெளியிட்டன? திரிபுராவில் பாதிரியார்கள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டத்தைப் பற்றி எந்த பத்திரிக்கையாவது இதுவரை எழுதியுள்ளதா? (மேலதிகத் தகவல்களுக்கு http://www.thinnai.com/?module=displaystory&story_id=206042110&format=html படிக்கவும்.) இணையம் இவர்களின் கண்ட்ரோலில் இல்லாததால் இது பற்றி எழுத முடிகிறது. இன்னொரு விஷயம் தெரியுமா? உலகத்தின் அழிவைப் போல கிருத்துவ மதம் முன்வைக்கும் மற்றொரு நம்பிக்கை சாத்தான். அவனுடைய எண் 666. அதை செமிடிக் மொழி ஒன்றில் மொழி பெயர்த்தால் வருவது என்ன தெரியுமா? WWW. வேல்ட் வொய்ட் வெப். இணையம்தான். மற்ற புரளிகள் போல இப்படியும் ஒரு புரளி.

 
At 6:39 AM, Blogger மாயவரத்தான் said...

ஹஹ்ஹா முத்து (தமிழினி).. உங்கள் presense of mind சிரிக்க வைக்கிறது.

ப்ரியன்..உங்கள் தளம் என்னவென்று கொஞ்சம் விளக்குங்களேன். (நான் சீரியசாக கேட்கிறேன். எனவே, இங்கே வேண்டாம். உங்கள் பதிவில். ஏனெனில் இப்போது அங்கே உங்கள் தளத்தை புரிய வைக்கிற மாதிரி அங்கே எதுவும் காணும்). அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்து எழுதலாமே.

 
At 9:28 AM, Anonymous Anonymous said...

நண்பர் muse என்ன சொல்ல வருகிறார்?

//காஞ்சி மடாதிபதிக்கு நடந்ததில் ஒரு 2 அல்லது 3 சதவீதமாவது எஸ்ராவுக்கு செய்ய முடியுமா? அல்லது குறைந்த பக்ஷம் ஏழ்மையில் வாடும் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் யாருமே அறியாத ஒரு பாதிரியின் மேல் ஒரு FIRஆவது பதிவு செய்ய முடியுமா?//

பாதிரியார் ஜான் ஜோசப் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்று சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். திருச்சியில் ஒரு பாதிரியார் சிறுவர்களுடன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களுக்கெல்லாம் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் சிபாரிசுக்கு அலையவில்லை. தப்புச்செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி. மதகுருவாக இருந்தாலும் சரி. தேவையில்லாமல் இங்கே காஞ்சி மடாதிபதியை இழுக்கும் நோக்கமென்ன? இதைத்தான் மதவெறி என்கிறோம்.

நமது மதத்தை போற்றுவதற்காக இன்னொரு மதத்தை இழிவுபடுத்துவது தேவையற்றது. மூடத்தனமானதும் கூட.

muse உங்கள் சொற்களில் அந்த வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.

by
Ganesh

 
At 7:43 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

நண்பர் கணேஷ் அவர்களே,

>>>>இவர்களுக்கெல்லாம் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் சிபாரிசுக்கு அலையவில்லை.<<<<

ஒரு முன்னாள் ஜனாதிபதி சிபாரிசுக்கு அலைந்தார் என்பது உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?

- மீடியாக்களின் மூலம். நல்லது.

மாட்டிக் கொண்டுவிட்ட இந்த இரண்டு பேருக்காகவும் யாரும் சிபாரிசுக்கு அலையவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

- ஏனென்றால் எந்த மீடியாவும் அது பற்றி வெளியிடவில்லை.

மீடியாக்களின் மூலம் உலகை பார்ப்பதற்கு பதிலாக நீங்கள் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என தயவுசெய்து பாருங்கள்.

நான் நீங்கள் கருதுவது போல வெறியனல்ல. நான் ஒரு ஹிந்து. எல்லா தெய்வங்களையும் என்னால் வழிபட முடியும். க்ருஷ்ணனின் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தியோடு நான் ஏசுவையும், அல்லாவையும் வணங்குகிறேன். ஒரு கடவுளை வணங்க பக்தி செய்ய ஒரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை என்பது என் மதம் சொல்லித் தரும் கருத்து. அனைத்து மனிதர்களிலும் தெய்வங்களை காண முயற்சி செய்கிறேன். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்பது என் புரிதல்.

செயின்ட் த்ரேஸா ஆப் அஸிஸி முதல் சமீப காலம் வரை வாழ்ந்த அன்டோனி டி மெல்லோ வரை எனக்கு கிருத்துவ புனிதர்கள் மேல் பக்தியுண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் மீடியாக்களும் அரசியல்வாதிகளும் தாக்குவது எனக்கு உடன்பாடல்ல.

நீங்கள் ஜான் ஜோசப் பற்றி ஞாபகம் வைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது. மீடியாக்களில் போலிச்சாமியார்களுக்கு கொடுக்கப்படும் பெயர் "ப்ரேமானந்தா" "ஜான் ஜோசப்" அல்ல. மீண்டும், மீண்டும், மறுபடியும் மீண்டும் பிரபலப்படுத்தப்படும் பெயர் "ப்ரேமானந்தா" "ஜான் ஜோசப்" அல்ல. மக்களுக்கு ஜான் ஜோசப் ஞாபகம் இல்லை.

பெரும்பாலான பொதுஜன திரைப்படங்களில் போலி சாமியார்களாகக் காட்டப்படுவது ஹிந்து சாமியார்களே. எங்கேனும் இஸ்லாமிய, கிருத்துவ மதத்தை சார்ந்த போலிகளை திரைப்படங்கள் ஒளிபரப்ப முடியுமா?

தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக காட்ட விரும்பிய நடிகர் மன்சூர் அலி கான் ஒரு படத்தில் ஒரு போலி சாமியாராக நடித்தர். (வேறு படங்களிலும் நடித்திருக்கலாம்). அதில் தலைவரை சுற்றி எப்போது பார்தாலும் இள வயசு குட்டிகள்தான். இந்த லட்ஷணத்தில் அந்த நடிகருடைய உடை அலங்காரம் அப்படியே ஸ்வாமி விவேகானந்தரின் உடை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்காக "உண்மையாகவே" பாடுபட்டு தன் வாழ்வை, சுகத்தை தியாகம் செய்த அந்த புனிதரை ஞாபகப்படுத்தும் உடை. இது ஒரு உதாரணம்தான். இது போல் பல படங்களை என்னால் அடுக்க முடியும். உங்களால் கிருத்துவ, இஸ்லாமிய சாமியார்களை பற்றி இதுபோல் கூறுகின்ற ஏதேனும் ஒரு திரைபடத்தை கூற முடியுமா? ஒரே ஒரு தமிழ்படம். நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.


ஒரு விளையாட்டிற்கு இந்த முயற்சி செய்து பாருங்களேன். கூகிளில் போய் முதலில் ப்ரேமானந்தா என்று டைப் செய்து தேடிப்பாருங்கள். எத்தனை பக்கங்கள் வருகின்றன என்பதையும் எவ்வளவு பொருத்தமானவையாக அவை இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். பின் ஜான் ஜோஸப் என டைப் செய்து தேடவும். எத்தனை பக்கங்கள் வருகின்றன என்பதையும் எவ்வளவு பொருத்தமானவையாக அவை இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். முடிவு என்ன என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டாம்.

உண்மையில் இதை நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. இந்த பதிலை உங்களுக்கு அளித்துவிட்டு இந்த சோதனையை நானும் செய்து பார்க்கப் போகிறேன்.

ஒரு திருச்சி சாமியாரைப் பற்றி பொதுப்படையாகக் கூறினீர்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே பலருக்கு தெரியாது. அவரது பெயர்கூட உங்களுக்கு இதை டைப் செய்யும்போது ஞாபகம் வரவில்லை.

ஞாபகமில்லாத விஷயம் நடக்காத விஷயமாகிறது.

 
At 9:44 PM, Anonymous Anonymous said...

நண்பர் ம்யூஸ் அவர்களே எங்கே பெரும்பான்பையானவர்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறார்களோ அங்கே அம்மதத்தினைப் பற்றிய கேலிகள் கிண்டல்கள் உள்ளன என்பது கண்கூடு ! நம் நாட்டில் இந்துக்கள்.இதேபோல் ஏசுவை கிண்டல் செய்து கிறுஸ்துவ பாதிரிகளை கிண்டல் செய்து ஏகப்பட்ட ஆங்கில திரைப்படங்கள் வந்துள்ளனவே !

//ஒரு கடவுளை வணங்க பக்தி செய்ய ஒரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை என்பது என் மதம் சொல்லித் தரும் கருத்து//


உங்கள் மத பெரியவரிடம் சொல்லிப்பருங்கள் !!!

அப்படியானால் இன்னும் கூட கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் மக்களுக்கு உங்கள் பதில்?


தான் விரும்பும் கடவுளைக்கூட பார்ப்பதற்கு கூட உரிமை மறுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு சமூகப்புரட்சியையும் பெரும் மாற்றத்தினையும் ஏற்படுத்திய ஒரு மதம் கிருஸ்தவம்!

 
At 4:32 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

ஸ்ரீமான் பெரியார்ஜி,

பெயருக்கேற்ற பதில் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் மதங்களில் ஹிந்து மதமும் ஒன்று. பெரும்பான்மை மதங்களில் அதிக அளவில் உள்ளது ஹிந்து மதம் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது மட்டும்தான் பெரும்பான்மை மதம் என்பது பூசணிக்காயை வெங்காயத்தில் ஒளிப்பது. பாகிஸ்தானை விட, பங்களாதேஷை விட இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். பெயருக்கேற்றபடி வேலை செய்கிறீர்கள்.

மற்ற நாடுகளில் ஒரே ஒரு பெரும்பான்மை மதம்தான் உள்ளது.

நீங்கள் பெரும்பான்மையை எண்ணிக்கை அளவில் பார்க்கிறீர்கள். அப்படியே பார்த்தாலும் ஒரே குழுவாக ஹிந்துக்கள் இல்லை. தனி மனித மெய்ஞான விடுதலையை முக்கியமாக்குவதால் இந்த மதத்தில் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட மனிதரையோ, புத்தகத்தையோ வழிபடுவதில்லை. குழுக்களின் அளவில் கணக்கிடுவீர்களானால் இது உண்மையில் பல சிறுபான்மையினர் உள்ள ஒரு பெரும்பான்மை மதம். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஒற்றுமையில்லாத கூட்டணி கட்சி. ஜெயலலிதாவை மரியாள் போல போஸ்டர் வைத்ததற்கு இந்தியா முழுவதும் கிருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமையில் மணியடித்தது போலவோ, எங்கோயிருக்கும் டென்மார்க்கில் ஒரு பத்திரிக்கை தன்னுடைய பத்திரிக்கை சுதந்திரத்தை உறுதி செய்து கொள்ள வெளியிட்ட கார்டூனுக்காக இந்தியா முழுவதும் பற்றி எரிந்தது போலவோ, அதில் நான்கு அப்பாவி பொதுமக்கள் (ஹிந்துக்கள்) கொல்லப்பட்டது போலவோ நடந்துகொள்வார்களா ஹிந்துக்கள். இதெல்லாம் ஹிந்து மதத்தை அவமானப்படுத்துவதால் நடக்காது. ஜெயலலிதாவை அன்னை பராசக்தியாக உருவகித்து நீங்கள் இன்னமும் கட் அவுட் வைத்து கொண்டுதான் இருக்கிறீர்கள். போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன.

உடனே நீங்கள் குஜராத்தை இழுப்பீர்கள். அதில் என்னவோ முஸ்லீம்கள் மட்டும்தான் கொல்லப்பட்டதாகக் காட்டும் மீடியாக்களின் செய்திகளை உதாரணம் சொல்வீர்கள். உண்மையில் அந்த மதக் கலவரத்தில் இறந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை, ஹிந்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அதனால் இதை ஒருவகையில் முஸ்லீம்களின் தோல்வியாகத்தான் அம்மதத்திலுள்ள தீவிரவாதிகள் கருதுகிறார்கள். அதை சரிகட்டத்தான் அத்தனை களேபரமும்.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டு கண்டனம் செய்த, செய்கிற, வன்மையாகக் கண்டிக்கிற ஹிந்துக்கள் இந்த வன்முறையை ஆதரிக்கும் மனிதர்களை விட எண்ணிக்கையிலும், பலத்திலும் அதிகம். ஒரு கேள்வி கேட்கிறேன். இதுவரை எந்த ஒரு மௌல்வியாவது, அல்லது இஸ்லாமிய தலைவராவது காஷ்மீரிலும், பம்பாயிலும், கோயம்புத்தூரிலும் குண்டு வைத்து சம்பந்தமேயில்லாத அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தீவிரவாதிக்கு எதிராக பத்வா அறிவித்ததுண்டா? அட, பத்வா கூட வேண்டாம். அந்த தீவிரவாதிகள் எல்லோரும் நரகத்திற்கு போவார்கள் என்றாவது சொல்லட்டுமே. அது கூட வேண்டாம். மதத்தின் பெயரால் பொது மக்களை கொன்ற "எல்லா" மதத் தீவிரவாதிகளும் நரகத்திற்குத்தான் போவர்கள் என்றாவது அனைவரும் அறியும்படி ஒரு அறிக்கையை ஒரு இஸ்லாமிய மதத் தலைவர் (அட அதுவும் வேண்டாம் ஒரு சாதாரண இஸ்லாமியர்) அறிவிப்பரா?

ஒற்றுமையாய் ஒரே குழுவாய் செயல்படுகின்ற ஒரு மதமாக ஹிந்து மதத்தை கருத முடியாது. ஆனால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் அங்கனம் செயல்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் கிருத்துவ இஸ்லாமிய மதங்கள்தான் பெரும்பான்மை மதங்கள்.

எந்த அரசியல் கட்சியாவது பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுக்களை பற்றி கவலைப்படுகின்றனவா? இல்லை. அவை குறி வைப்பது ஜாதி வோட்டுக்களைத்தான். இங்கே ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம்போல் செயல்படுகின்றது. அதே சமயத்தில் பிஜேபி உட்பட கட்சிகள் கவலைப்படுவது சிறுபான்மையினரின் (கிருத்துவ இஸ்லாமிய) ஓட்டுக்களுக்குத்தான். ஏனென்றால் அவை நிஜமான உலகத்தில் பெரும்பான்மை மதங்கள். வெறும் பெரும்பான்மை மட்டும் அல்ல. பலமுள்ள பெரும்பான்மை. ஏதேனும் எதிர்த்தால் காயடித்துவிடுவார்கள். அதனால்தான் அவற்றைப் பற்றி யாரும் கேலி செய்ய அஞ்சுகிறார்கள். நீங்களும்தான்.

இங்கே கிருத்துவ பள்ளிகளில், கல்லூரிகளில் இடம் கிடைக்க நீங்கள் கிருத்துவராக இருந்தால் வாய்ப்பு அதிகம். ஏதேனும் ஒரிரு ஹிந்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மிக மிக நன்றாக படிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒருவித அறிவிக்கப்படாத கோட்டாவை இவர்கள் பின்பற்றுபவர்களாகவிருக்கிறார்கள்.

நீங்கள் பெரும்பான்மை மதம் பின்பற்றப்படும் நாடுகள் என எழுதியபோது அமெரிக்காவையும், இங்கிலாந்தையும், யூரோப்பிய நாடுகளையும் மனதில் வைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அங்கே கிருத்துவ மதத்தை மட்டுமல்ல, மற்ற மதங்களையும் கிண்டல் செய்து நீங்கள் படம் எடுக்கலாம். படங்கள் உண்டு. இதே ஹிந்து மதத்தையும், புத்த மதத்தையும் கேலி செய்தும் அங்கே ஆங்கில படங்கள் எடுத்துள்ளார்கள். இந்தியாவை போல ஒரே ஒரு சோப்ளாங்கியை மட்டும் அவர்கள் கேலி செய்வதில்லை. டென்மார்க் பத்திரிக்கையை இந்த விஷயத்தில் எடுதுக்காட்டாக கொள்ளலாம்.

நான் ஒரே ஒரு தமிழ் படத்தை பற்றி கேட்டல் நீங்கள் ஆங்கில படத்தை பற்றி கூறுகிறீர்கள். எங்களூர் குப்பனும், சுப்பனும் தரமான ஆங்கில படங்களையா பார்க்கிறார்கள்? அவர்கள் பார்க்கும் ஆங்கில படங்களில் முக்கலும், முனகலும்தான் அதிகம். வசனம் குறைவு. கதையை ஒரு ஸ்டாம்பின் பின்னால் நீங்கள் எழுதிவிடலாம்.

கலைக்கான சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஹுசைன் ஸரஸ்வதியையும், பாரத மாதாவையும் ஆபாசமாக வரையலாம். ஆனால் அதே ஆள் கிருத்துவ இஸ்லாமியத்தில் உயர்வாகக் கருதப்படும் பெண்டிரை அதேபோல் வரைய மாட்டார். நீங்கள் சொல்லலாம் உங்கள் கோயில் சிற்பங்கள் தெய்வங்களை நிர்வாணமாக வைத்துள்ளனவே என்று. அந்த காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தெய்வங்களும் வடிவமைக்கப்பட்டார்கள். இஸ்லாமிய கிருத்துவ ஆதிக்கங்களின் விளைவாக தற்காலத்தில் ஹிந்துக்களும் தங்கள் தெய்வங்களை மரியாதைக்குரிய ஆடை கலாச்சாரத்துடந்தான் வணங்குகிறார்கள். தற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தெய்வங்களை தற்கால ஒழுக்க விதிகளுக்கேற்ப ஆடைகளோடுதான் படைக்கிறோம், வணங்குகிறோம்.

நான் சொல்வதெல்லம் ஹிந்து மதத்தை கேலி செய்யாதீர்கள் என்பதில்லை. அந்த மதத்தை மட்டும் கேலி செய்வதை விடுங்கள். எந்த மதத்தையும் கேலி செய்யாதீர்கள். அல்லது எல்லா மதங்களையும் கேலி செய்யுங்கள். என்னுடைய கருத்தின்படி ஆன்மீகத்தை அழித்து அரசியல் செய்வதே மதங்கள். அவை எந்த வடிவில் இருந்தாலும் அவற்றிலுள்ள முட்டாள்தனமான, கீழ்த்தரமான விஷயங்கள் விமர்சனம் செய்யப்படவேண்டும்.

அதுவன்றி ஹிந்து மதம் மாறுதல்களை ஏற்று கொள்ளுகின்ற ஒரு மதம். மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாமல் அதை ஒரு இறுகிய அமைப்பாக மாற்ற நடத்திய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கிருத்துவ இஸ்லாமிய ஆட்சிகளின் விளைவால் அம்மதங்களை போன்றே ஹிந்து மதத்தையும் ஒரு இறுகிய அரசியல் அமைப்பாக மாற்ற தற்காலத்தில், மக்களின் ஆதரவில்லாமல் நடந்துவரும் முயற்சிகளும் தோல்வியில் முடியும் (அதுவரை இந்த மதம் தப்பிப் பிழைத்தால்).

அதெல்லாம் சரி தலைவரே. அரேபிய, வளைகுடா நாடுகளை விட்டுத் தள்ளுங்கள். ஜனநாயகத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும், உண்மையாகவே முஸ்லீம்கள் "பெரும்பான்மையாகவுள்ள" பங்களாதேஷிலோ, மலசியாவிலோ இஸ்லாமையோ, நபிகள் நாயகத்தையோ கேலி செய்து ஏன் ஒரு பத்திரிக்கையோ, திரைப்படமோ வரவில்லை?


>>>உங்கள் மத பெரியவரிடம் சொல்லிப்பருங்கள் !!!<<<

நான் என்ன சொல்வது? இதை என்னிடம் சொன்னவரே என் மதத் தலைவர்தான். அவருக்கு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், பரமஹம்ஸ யோகானந்தர், குருஜி கோல்வல்கர், ரிஷிகேஷ் ஷிவானந்தர், ஷிர்டி ஸாய் பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, ராமானுஜர், ஸ்வாமி ராம்தாஸ், ரமண மகரிஷி, ஸ்வாமி சித்பவானந்தர், ஜே க்ருஷ்ணமூர்த்தி, ஆதி ஷங்கரர், சுப்ரமண்ய பாரதி, ஸ்வாமி சுகபோதானந்தா, ஸ்வாமி ரங்கனாதானந்தர், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்,............. என்று பல பெயர்கள்.

பதிலுக்கு ஒரு கேள்வி. நான் மேலே சொன்ன அனைவரும் அல்லாவையும், ஏசுவையும், ஜெஹோவாவையும் வழிபட்டு ஒருவர் வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் முன்னேற முடியும் என்று வெளிப்படையாகக் கூறுபவர்கள். அதே போல எஸ்ரா கூறுவாரா?


>>>>இன்னும் கூட கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் மக்களுக்கு உங்கள் பதில்? <<<<

எந்த கோயிலில் மக்களை அவர்களது ஜாதிக்காக அனுமதிக்க மறுக்கிறார்கள்? எல்லாருக்கும் கோயில்களில் அனுமதியுண்டு.

ஆனால் நீங்கள் கூறுவது கோயில் கருவறை என்றால் அது ஓரளவு சரி. அங்கே பூசாரிகளுக்கு மட்டும்தான் அனுமதி. வேறு யாருக்கும் அவர் எந்த உயர் ஜாதியை சார்ந்தவராகவிருப்பினும் அனுமதி கிடையாது. இதுவும் தென்னிந்தியாவில் மட்டும்தான். இங்கு தெய்வங்கள் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவை. வட இந்தியாவில் எல்லாரும் கர்ப்ப க்ருஹம்வரை சென்று தெய்வத்தை வணங்கலாம். கட்டியணைக்கவும் செய்யலாம்.

சில ஹிந்து கோயில்களில் பிற மதத்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அனுமதி இல்லை என்று போர்டுகள் தொங்குகிறது. இதற்கு காரணம் அந்த கோயிலை, தெய்வத்தை அவமானப் படுத்திவிடக் கூடாது என்ற காரணம்தான். பிற மதத்தவர்கள் அங்கனம் செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்தால் அவர்களும் மற்றவர்களோடு அனுமதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் தற்கால சட்டங்களின் அடிப்படையில் எழுந்தது. நடைமுறையில் பிற மதத்தவர்கள் இந்த போர்டுகளை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சுற்றி பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நானே மதுரை மீனாக்ஷி அம்மனின் கோயிலில் பலமுறை பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு நான் பார்த்தவைகளில் ஒன்று. ஒரு கிருத்துவ பெண் துறவி (ஸிஸ்டர் என அழைக்கிறோமே அவர்) பள்ளியில் பயிலும் பெண்களை (சுமார் 50, 60 பேர்) அழைத்துக்கொண்டு "மற்ற மதத்தவருக்கு" தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து சுற்றி வந்தார். அங்கிருக்கும் சிற்பங்களை பார்ப்பதற்காக இல்லை. அவர் அந்த உருவ பொம்மைகளையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் முகத்தில் அந்த போர்டை ஏளனம் செய்துவிட்ட த்ருப்திதான் தெரிந்தது. அந்த குழுவில் இருந்த ஒரு பெண் "கோயிலுக்குள் சென்று அம்மனை பார்த்துவிடலாம்" என்று சொன்னதற்கு அவருடைய தோழி "வேண்டாம் ஸிஸ்டர் திட்டுவாங்க" என்று கூறி விட்டாள். ஏறத்தாழ 50, 60 பெண்கள். ஹிந்து பெண்கள் தன் மாத விலக்கு நாட்களில் கோயிலுக்கு வருவதில்லை. இந்த பெண்களில் ஏதேனும் ஒரு பெண் இந்த காரணத்திற்காக வர மறுத்திருந்தால், ஸிஸ்டர் திட்டியே கொன்றிருப்பார்கள்.

என்னுடைய நீண்ட நாள் ஆசை இது. ஒரு மஸூதியில் போய் என் தெய்வம் அல்லாவை மற்ற இஸ்லாமியர்களோடு நின்று வழிபட வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று விவரமறிந்தவர்களை கேட்டு சொல்வீர்களா? தயவு செய்து. ஒரு இஸ்லாமியனாக மாறுவதைத் தவிர்த்து அனைத்து இஸ்லாமிய சடங்குகளையும் செய்ய நான் தயாராகவுள்ளேன்.

>>>>ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு சமூகப்புரட்சியையும் பெரும் மாற்றத்தினையும் ஏற்படுத்திய ஒரு மதம் கிருஸ்தவம்!<<<

அதனால்தான் கிருத்துவ நாடார்களுக்கும், கிருத்துவ முதலியார்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதையை தலித் கிருத்துவர்களுக்கு சர்ச்கள் கொடுக்க மறுக்கின்றன. சில சர்ச்சுகளில் தலித் மற்றும் மீனவ கிருத்துவர்கள் பின்னால்தான் உட்கார வேண்டும். கிருத்துவம் இந்தியாவில் தோன்றி ஏறத்தாழ 400 - 500 வருடங்கள் இருக்கும். இதுவரை பிஷப்பாக ஒரு தலித் கிருத்துவர்கூட ஆனதில்லை.

நம்முடைய மதத்தையும் தெரிந்து கொள்ளாமல், மற்ற மதங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் நாம் இருப்பதால்தான் பிரச்சினைகளே.

 
At 5:03 AM, Blogger ஜெயக்குமார் said...

//சில சர்ச்சுகளில் தலித் மற்றும் மீனவ கிருத்துவர்கள் பின்னால்தான் உட்கார வேண்டும். //

இது நான் கண்ணால் பார்த்த ஒன்று. நான் வளர்ந்த கிராமத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தலித்துகளின் குடியிருப்புகளும் ஊருக்கு வெளியேதான் உள்ளது.

 
At 5:09 AM, Blogger மகேஸ் said...

//வட இந்தியாவில் எல்லாரும் கர்ப்ப க்ருஹம்வரை சென்று தெய்வத்தை வணங்கலாம். கட்டியணைக்கவும் செய்யலாம்.//
இது மிகவும் உண்மை. நான் உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போது நான் மூலக் கடவுளையே (சிவலிங்கத்தை) தொட்டுப் பார்த்தேன்.

 
At 12:47 AM, Anonymous Anonymous said...

//இதுவரை பிஷப்பாக ஒரு தலித் கிருத்துவர்கூட ஆனதில்லை. //

நண்பரே ம்யூஸ் உங்களின் அறியாமை எச்சங்களை இங்கே தெளித்துள்ளீர்கள்.ஏன் தெரியுமா ? அதற்கான பதிலையும் நீங்களே கொடுத்துள்ளீர்கள் !

//நம்முடைய மதத்தையும் தெரிந்து கொள்ளாமல், மற்ற மதங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் நாம் இருப்பதால்தான் பிரச்சினைகளே.//

யார் சொன்னார் தலித்துகள் பிஷப் ஆவதில்லை என்று? எத்தனை தலித்துகள் இன்று பிஷப்பாக இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு ? அறிந்து பேசுக ! தங்களின் அறியாமையை முரசறிவிப்பது ஏனோ?

விளம்பரத்துக்காக இல்லாமல் கொஞ்சம் அறிவையும் தாங்கள் உபயோகித்து சிந்திக்கலாமே!!!

//இது மிகவும் உண்மை. நான் உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போது நான் மூலக் கடவுளையே (சிவலிங்கத்தை) தொட்டுப் பார்த்தேன்.//

நண்பர் மகேஸ் அவர்களே சக மனிதனையே தொட்டால் பாவம் என ஒதுக்கிவிட்டு கடவுளைத்தொட்டு என்ன பயன்? சிந்திப்பீர் தோழர்களே !!

தேவையின்றி கோபம் கொள்ளீர்

'மதம்' பீடித்து அலைவது யாவருக்கும் கேடே !! மதமல்ல வாழ்க்கை ! அது ஒரு வாழ்வியல் வழியே ! எம்மதமாயிருந்தாலென்ன ? சம்மதம்மதமாயிருத்தல் நலம்.

 

Post a Comment

<< Home