$user_name="Jeyakumar";

Sunday, April 16, 2006

கேப்டன் Vs காவல்துறை (ஓரவஞ்சகம்)

தினமலர் செய்தி

தேர்தல் கமிஷன் உத்தரவை காட்டி கெடுபிடி போலீசாருடன் விஜயகாந்த் வாக்குவாதம்

மதுரை : மதுரையில் தேர்தல் கமிஷன் உத்தரவை காட்டி உன்று வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என கெடுபிடி விதித்த போலீசாருடன் தே.க.தி.க., தலைவர் விஜயகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பராபட்சம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 24 இடங்களில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார்.

இதற்காக அவர் மேல ஆவணி மூல வீதியில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட தயாரானார்.

அனுமதி மறுப்பு: ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, நரிமேடு, குரு தியேட்டர் சந்திப்பு உட்பட அவர் பேசயிருந்த இடங்களில் கட்சியினர் கொடி, தோரணங்களை கட்டினர். ஸ்பீக்கர்கள் வைக்கவும் கயற்சி செய்தனர். இவற்றுக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. விஜயகாந்த் பேசும் போது மட்டும் ஒரு மணிநேரம் கொடி, தோரணங்கள் கட்டி கொள்ள அனுமதித்த போலீசார் ஸ்பீக்கர் வைக்கக்கூடாது என தெ஛வித்து விட்டனர்.

இதுகுறித்து விஜயகாந்துக்கு ஆங்காங்கே இருந்த கட்சியினர் தகவல் கொடுத்தனர். மேலும், பிரசாரத்தின் போது மூன்று வாகனங்களில்

மட்டுமே செல்ல வேண்டும் எனவும் போலீசார் கட்சி நர்வாகிகளிடம் தெ஛வித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க.,வினர்

போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூடுதல் வாகனங்களை செல்ல அனுமதிக்கும்படி கேட்டு கொண்டனர்.

உயரதிகாரிகள் மறுத்ததால் விஜயகாந்த் பிரசாரத்திற்கு புறப்படுவது தாமதமானது.

வாக்குவாதத்தால் பரபரப்பு: இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் சென்று கட்சி பொருளாளர் சுந்தர்ராஜன், நிகர்

தலைவர் ரவீந்திரன் மற்றும் நர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கட்சி அலுவலத்தில் இருந்த விஜயகாந்த், இந்த கெடுபிடிகளை மற்ற கட்சியினரிடம் காட்டாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மூன்று வாகனங்களுக்கு மேல் செல்ல அனுமதியில்லை என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.

விஜயகாந்த் ஆவேசம்: இதுகுறித்து விஜயகாந்த் நருபர்களிடம் கூறியதாவது: போலீசார் எதற்காக இப்படி நிடந்து கொள்கிறார்கள் என தெரியவில்லை. நேற்று முன்தினம் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை வந்த என்னை போலீசார் தி.மு.க., துணை பொதுச் செயலர் ஸ்டாலின் வருவதாக கூறி விருதுநிகர் வழியாக செல்லும்படி திருப்பி விட்டனர். அவரது காருக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் சென்றன. பல மணி நேரம் கொடி, தோரணங்களை கட்டியிருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க., தி.மு.க., தலைவர்களுக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் செல்வதை எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர். அந்த தலைவர்களுக்கு கட் அவுட், கொடி, தோரணங்கள் வைக்கப்படுகின்றன. ஆளுங்கட்சி தரப்பில் போலீசாருக்கு தொந்தரவு இருக்குமோ என தெரியவில்லை.

தனித்து போட்டியிடும் எனக்கு சின்னம் இன்னும் முடிவாகவில்லை.இதுகுறித்து மக்களிடம் எடுத்து சொல்ல ஸ்பீக்கர் வைக்கக்கூட போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். என் கட்சி வளரக்கூடாது என தடுக்கின்றனர். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.பின்னர் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து பிரசார கூட்டங்களிலும் விஜயகாந்த் குறிப்பிட்டார்.

1 Comments:

At 3:25 PM, Blogger VSK said...

இது போலத்தான் "அலைகள்" ஆரம்பிக்கும்!

மக்களின் அனுதாபம் இவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தால், காற்றுத்தீயென 'அலை' அடிக்க அதிக நேரம் ஆகாது!!

கேப்டன் போகும் இடமெல்லாம், இதைச் சொல்லத் தவறக்கூடாது!

அதுவும், மதுரை!
அவர் சொந்த ஊர்!
கலக்குங்க கேப்டன்!!

 

Post a Comment

<< Home