$user_name="Jeyakumar";

Tuesday, January 05, 2010

நவீனமாகியும் மாறாத இந்தியாவின் “க்யூ” சிஸ்டம்.

சமீபத்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு வேலையாக போயிருந்தேன். இணையதளத்தில் குறிப்பிட்டபடி 8:30 க்கு டோக்கன் வாங்க கடும் குளிரில்(-1C) 7:15க்கே சென்றுவிட்டேன். எனக்கு முன்னறே பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 30 பேர் அங்கு “க்யூ” வில் நின்று கொண்டிருந்தார்கள். இந்திய தூதரகம் பயனீட்டாளர்களுக்கு எந்த விதமான வசதியும் அங்கு செய்துதரவில்லை. அந்த கடும் குளிரில் அனைவரும் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தனர். குளிருக்கோ அல்லது மழைக்கொ எந்தவிதமான வசதியும் அங்கு இல்லை. இங்கு உள்ள பெரும்பாலான தூதரகங்களில் appointment system நடைமுறைக்கு வந்து பல வருடங்கள் ஆகியும் நம் தூதரகம் மட்டும் நம்மக்களை “க்யூ”-வில் நிற்கவைத்து இப்படி அவதிப்பட வைக்கிறது. எல்லாவித சேவைகளுக்கும் ஒரே “க்யூ” தான். இதே முறையை முன்பு ஒருமுறை திருச்சியிலும் கண்டேன்(சமீபத்தில் அங்கு நடந்த அடிதடி மற்றும் மறியல்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்). பெயர் மாற்றம் செய்ய வருபவர்க்கும் புது பாஸ்போர்ட் விண்ணபிக்க வருபவருக்கும் ஒரு “க்யூ” தான். இங்கு சாதாரண பொட்டிக்கடையில் கூட டெபிட் மற்றும் கிரிடிட்கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது ஆனால் நம் தூதரகத்திற்கு இன்னும் கையில் பணம் தான் எடுத்துச்செல்லவேண்டும். அங்கு வேலை செய்பவர்கள் சிரிக்க மறந்து பல நாட்கள் ஆனவர்கள் போலத்தான் உள்ளனர். டோக்கன் கொடுக்கும் “பாட்டியம்மா” தேமே என்று டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்தது. டோக்கன் வைத்திருந்தவர்களில் பலர் தங்களை அழைக்கும் முன்னரே கவுண்டர் அருகில் நின்றுகொண்டு அடுத்து போக அவசரசரப்ப்ட்டுக்கொண்டு இம்சித்தார்கள். வேலைசெய்பவர்களில் பலர் வீட்டு அடுப்பாங்கரையில் கையில் இருந்த கரண்டியை அப்படியே போட்டுவிட்டு வந்தவர்கள் பொல உடையணிந்து இருந்தார்கள்.

வெளிநாடுகளில் உள்ள நல்ல நடைமுறைகளை நாம் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் என்று இன்னும் எனக்கு புரியவில்லை. நம் நாட்டில் அன்றைக்கே வேலை நடக்கவேண்டும் என்றால் நாம் அலுவலர்களை தனியாக கவனிக்கவேண்டும். ஆனால் இங்கு அதுபோன்ற சேவைகளுக்கு “Express” என்று பெயர்வைத்து கூடுதல் பணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் அந்த பணம் அரசாங்கத்திற்குப் போகிறது. அதனால் தான் வளர்ந்த நாடுகளில் அரசு பணக்கார அரசாகவும், மக்கள் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற சேவைகள் பல தபால் முறையில் நாம் நேராக போகாமலேயே வேலை நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் முதல் பல இன்னல்களும் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.

சிந்திக்கத் தெரியாத, பிற்போக்கு சிந்தனையுள்ள வயதான கிழட்டு அதிகாரிகளை வைத்துக்கொண்டு இந்தியா 2020-வில் வல்லரசாகும் என்றும் நாம் கனவு மட்டும்தான் கானமுடியும் என்று நினைக்கிறேன்.

Monday, September 14, 2009

ராகுல், விஜயகாந்த், தா. பாண்டியன் மற்றும் நதி நீர் இணைப்பு

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழும் வரைதான் அவனுக்கு இயற்கையின் இயல்பான நன்மை கிடைக்கும். இயற்கையை மாற்ற அல்லது கட்டுப்படுத்த நினைத்தால் அதனால் அழிவுதான் நேரும் என்பது பல வல்லுனர்கள் பல ஆய்வுக்கு பின் கண்ட உண்மை.

இதற்கு இன்று வறண்டு கிடக்கும் தமிழக நதிகளே சாட்சி. ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டியதால் இன்று பல ஆறுகள் செத்துவிட்டன என்பதை நாம் கண்கூடாக காணலாம். ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால் பல ஆறுகள் நீர்வரத்து இன்றி இன்று சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும், மணல் திருட்டால் அதன் தன்மையை இழந்து சாக்கடைகளாகவும், புல் பூண்டுடன் புதர்களாகவும் காட்சியளிக்கின்றன. நம் அடுத்த தலைமுறைகளில் இந்த ஆறுகள் இருக்குமா எனப்து சந்தேகமே. ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் தண்ணீரைத்தேக்கி வைக்க கண்மாய்கள் இருக்கும் போது தடுப்பணைகள் எதற்கு. இப்போது உள்ள நீர்வரத்து, அதற்குரிய தேவைகளாலும் தண்ணீர் கடலுக்குள் சென்று வீணாக வாய்ப்பே இல்லை. இன்று நீர்வரத்து இல்லாததால் பல கண்மாய்கள் மேடுகளாகவும், கருவேலங்காடுகளாகவும் இருக்கின்றன. அதனால் அதிகப்படியான வெள்ளம் வரும் போது அது உடைந்து ஊருக்குள் வந்து அழிவை ஏற்படுத்துகின்றன.

நதிகளை இனைப்பாதால் இப்போது உருப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளும் செத்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவ்வாரு இணைக்கும் போது அது பல மாநிலங்களின் வழியேதான் அது சாத்தியமாகும் . அவ்வாரு வரும்போது ஒவ்வொரு மாநிலமும் அதற்கு உரிமைகோரும், தேவையற்ற சண்டைகள் வந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விழைவிக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

Thursday, January 24, 2008

Ind Vs Aus 4th Test 1st Day Highlights

Thursday, January 17, 2008

India Vs Aus 3rd Test 2nd Day Highlights

Monday, January 07, 2008

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஒரு அவமான சின்னம்!

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் ஆட்டம் என்பதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது என்ற தோற்றத்தை இந்திய ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான
கடைசி ஆட்டம் நிருபித்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

அம்பயர்களில் மோசமான தீர்ப்புகள் தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்றாலும், ஆஸ்திரேலிய வீரர்களின் விளையாட்டிற்கான உண்மையான
மனப்பக்குவமின்மை தான் மிக முக்கியமான காரணம் என்று என்னால் சொல்ல முடியும். ஒரு காலத்தில் தான் ஆட்டமிழந்தது உண்மை என்று தெரிந்தால் உடனே
ஆடுகளத்தைவிட்டு வெளியேரும் கில்கிறிஸ்ட் கூட இந்த போட்டியில் சிறுபிள்ளைத்தனமாக் நடந்து கொண்டார்.

முதல் இன்னிங்ஸில் சைமண்ட்ஸ் அடிக்க முயன்று மட்டையில் பட்டு அதை தோனி பிடித்தவுடன் உண்மையான ஜெண்டில்மேனாக இருந்திருந்தால், அவர் உடனே
அம்பயரின் தீர்ப்புக்கு காத்திராமல் வெளியேறி இருக்கவேண்டும் ஆனால் அவ்வாரு செய்யவில்லை, அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை(அந்த சத்தம் (நிக்) மைதானத்திற்கு அருகில் இருந்த தெறுவில் சென்றவர்களுக்கு கூட கேட்டதாம்).
அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் கும்ளே பந்தை கிளார்க் அடிக்க முற்பட்டு அது மட்டையில் பட்டு ட்ராவிட் அழகாக அதை பிடித்தார், இதை பார்த்த எவருக்கும் தெரியும் அவர் ஆட்டமிழந்துவிட்டார் என்று, ஆனால் கிளார்க் வெளியே செல்லாமல்
அம்பயரின் தீர்ப்புக்காக (ஒருவேளை சைமண்ட்ஸுக்கு சொன்னது போல அவுட் இல்லை என்று சொல்லுவாரோ என்று) காத்திருந்தார். ஆனால் இந்தியர்கள் மட்டும் உடனே செல்லவேண்டும்
இல்லையெனில் அவர்கள் ஜெண்டில்மேன் இல்லை அல்லது அம்பயர்களை அவமதிக்கின்றனர் என்று கூறுவர். இதே கிளார்க் கங்கூலி அடித்த பந்தை தரையில் பட்டு பிடித்துவிட்டு அது அவுட் என்று
வாதாடினார்(இதை 5-ஆவது அம்பயர் பாண்டிங் உறுதி செய்தார்). இவர்தான் நாளைய ஆஸ்திரேலிய கேப்டனாம்(நல்ல தேர்வு). ஜெண்டில்மேன் கில்கிறிஸ்ட் கூட ட்ராவிடின் கால்காப்பில் பட்டு வந்த பந்தை பிடித்துவிட்டு அதற்கு அம்பயரிடம் அவுட் கோரினார்.
அன்றைய தினம் ஆனேகமாக அவர்கள் வீசிய எல்லா பந்துகளுக்கும் அவர்கள் அவுட் கோரினர் என்று தான் சொல்லவேண்டும். இதையே இந்தியர்களோ அல்லது மற்ற ஆசிய நாட்டு வீரர்களோ செய்திருந்தால்
"ஒவர் அப்பீல்" என்று கூறி அவர்களுக்கு அம்பயர்கள் தண்டனை வாங்கி கொடுத்திருப்பர். இதெல்லாம் போதாதென்று மனதளவில் இந்தியர்களை தாக்க ஹர்பஜன் மீது இனவேறி புகார் கொடுத்தனர். சாட்சியே இல்லாத அந்த குற்றச்சாட்டிற்கு அவருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை.
இந்த தொடரில் ஹர்பஜன் பந்தில் மூன்று முறை குறைந்த ஓட்டங்களுக்கு பாண்டிங் ஆட்டமிழந்துள்ளார் என்பதையும் இங்கே நாம் மனதில் கொள்ளவேண்டும்.
இதெல்லாம் எதற்காக தொடர்ந்து 16 முறை வென்று சாதனை செய்யவேண்டும் என்பதற்காக. ஆனால் இதுபோன்ற அவர்களில் முயற்சிகள் அவர்களுக்கு அவமானத்தியே தேடித்தரும் என்பது மட்டும் நிச்சயம்.

உலகில் கிரிக்கெட்டிற்கு அதிக மதிப்பும் வருமானமும் பெற்றுத்தரும் இந்தியா இனியும் சும்மா உட்காந்திராமல், ஆஸ்திரேலியர்களில் கொட்டத்தை அடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்





Saturday, January 05, 2008

Ind Vs Aus 2nd Test 4th Day HQ highlights


Friday, January 04, 2008

Ind Vs Aus 2nd Test 3rd Day HQ Highlights


Ind Vs Aus 2nd Test 3rd Day Highlights