$user_name="Jeyakumar";

Thursday, September 07, 2006

தமிழகத்தின் தலைப்புச்செய்தியாக வேண்டுமா?

சில வாரங்களுக்கு முன் தமிழ் மணத்தில் ஒருவர் தினகரனின் இமாலய சாதனையைப் பற்றி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.

அந்த பத்திரிக்கையில் நீங்கள் தலைப்புச்செய்தியாக வேண்டுமா? இதோ சில யோசனைகள்

1. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நடக்கும் சினிமா அல்லது தொலைக்காட்சித்தொடர் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் கதாநாயகியைக் கூட வேண்டாம், ஒரு துணை நடிகையை நீங்கள் (அடிக்கக்கூட வேண்டாம்) சற்று மிரட்டிவிட்டு வாருங்கள் போதும். அன்றைய மாலை "தமிழ் முரசு" மற்றும் மறுநாள் தினகரனின் தலைப்புச்செய்தியாக
நீங்கள் இருப்பீர்கள்.

குறிப்பு: உங்கள் புகைப்படம் வரவேண்டுமென்றால் நீங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லுமுன் இந்த பத்திரிக்கைகளுக்கும்,சன் தொலைக்காட்சிக்கும் இது பற்றிய ஒரு மொட்டைச் செய்தியை முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.

2. ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வைகோவை கைது செய்யச்சொல்லி அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் ஆய்வாளருக்கு ஒரு புகார் மனு ஒன்றை எழுதுங்கள். காவல் நிலையம் செல்லுமுன் சன் தொலைக்காட்சிக்கும், மேலே குறிப்பிட்ட தமிழகத்தின் தரமான பத்திரிக்கைகளுக்கும் "தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தமிழகத்தை பதட்டம் மிகுந்த பகுதியாக மாற்றும் விதமாகவும் பேசும் வைகோ-வை கைது செய்யச்சொல்லி வழக்கு பதிவு செய்யப்போகிறொம்" என்று தகவல் சொல்லி விடுங்கள். அதோடு காவல் நிலையத்தின் முகவரி நீங்கள் செல்லும் நேரம் ஆகியவற்றையும் தெரிவித்து விடுங்கள்.
அப்புறமென்ன? அன்றைய இரவு 8 மணி செய்திகளில் நீங்கள் தான் தலைப்பு செய்தி.

குறிப்பு: உங்களுடைய பேட்டி நிச்சயமாக் ஒளிபரப்பாகும், எனவே திக்கி தினறாமல் பேட்டி கொடுக்க நன்றாக பயிற்சி எடுத்து வரவும்