$user_name="Jeyakumar";

Tuesday, May 30, 2006

முத்தமிட ஆசை!













சர்வதேச இலவச அழைப்புகளுக்கு... இந்தியாவுக்கு 2.50 ரூபாய்

அன்பான தமிழ்மணம் வாசகர்களுக்கு,

நீங்கள் ஏற்கனவே voipstunt என்ற மென்பொருள் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் அமெரிக்க, ஜ்ரோப்பா மற்றும் சில வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கிற (சீனா உட்பட) பல ஆசிய நாடுகளுக்கும் , இலவசமாக அவர்களின் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் (அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் செல்போன் அழைப்புகள் இலவசம்).

இப்போது அதே நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள voipcheap என்ற மென்பொருள் மூலமாக இந்தியாவை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்திய நாணய மதிப்பில் நிமிடத்திற்கு சுமார் 2.50 ரூபாய்க்கு அழைக்கலாம்(செல்போன் உட்பட).

இதில் இலவசமாக சோதித்துப்பார்க்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் நீங்கள் கட்டணம் செலுத்தாமல் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் பேசலாம். பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் இந்த வசதியை நீங்கள் பலமுறை சோதித்துபார்க்கலாம். ஓவ்வொரு முறையும் உங்களால் ஒரு நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து பேச முடியாது.

நீங்கள் தொடர்ந்து பேசவேண்டுமானால் நீங்கள் குறைந்த பட்சமாக €10.00 கட்டணம் செலுத்து உங்கள் கணக்கை துவக்கலாம். இதன் மூலம் இலவச அழைப்புகளை தடங்கல் இல்லாமல் பல மணி நேரமும், கட்டண அழைப்புகளை தடங்கல் இல்லாமல் தொடர்ந்தும் பேச முடியும். இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர் வீட்டில் அகன்ற அலைவரிசை internet வசதி இருந்தால், அவர்களிடம் உங்களுடைய username and password -ஜ் கொடுத்து இந்த மென்பொருள் மூலமாக உங்களை தொடர்புகொள்ளச் செய்யலாம். நீங்கள் இலவச அழைப்புகள் வசதி வழங்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்தால், இது மிகவும் வசதி தானே.

வீட்டை விட்டு தொலை தூரம் இருக்கிறோம் என்ற எண்ணம் இதன் மூலம் நீங்க வாய்ப்புள்ளது. இந்த வசதியை voipstunt மூலமாக பல மாதங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அனுபவிக்க வாழ்த்துக்கள்.

Saturday, May 27, 2006

இன்னா செய்தாரை ஒறுத்தல் .....

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்திற்கு கொடுமை இழைத்தது என்பதற்காக, இந்த தலைமுறையை சேர்ந்த அந்த சமுதாயங்கள் ஒன்றை ஒன்று தூற்றிக்கொள்வது ஆரோக்கியமான விசயம் அல்ல. அதற்காக அந்த சமுதாயத்தினர் செய்த கொடுமைகள் இல்லை என்று ஆகிவிடாது. அது வரலாற்றில் அந்த சமுதாயத்தின் மீதான ஒரு கலங்கமாக என்றும் இருக்கும்.

உதாரணமாக ஜப்பான் மீது அணுகுண்டு வீசித்தாக்குதல் நடத்தி அதன் பொருளாதாரத்தையே சீரழித்தது அமெரிக்கா. அதற்காக அமெரிக்காவை குறை சொல்லிக்கொண்டிராமல், மற்ற நாடுகளிடமும் அதிகம் கையேந்தாமல் தன் சுய உழைப்பை கொண்டு அந்த நாடு இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று பல ஜப்பானியர்கள் அமெரிக்காவிலும், பல அமெரிக்கர்கள் ஜப்பானிலும் வேலை செய்துகொண்டு சகஜமாக பழகிகொண்டுதான் இருக்கிறார்கள். குண்டு வெடித்த நாளன்று ஜப்பானியர்களின் நினைவஞ்சலிகள், அமெரிக்கர்களின் மனங்களில் ஒருவித கணத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும்.


அதே போல நம் தேசத்தை நாளைய உலகிற்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலைசெய்தனர். நாளை அவர்கள் தனி நாடு அமைத்தாலும் அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்ற அந்த நிகழ்வு மட்டும் மாறவே மாறது. அது ஒரு அழியாத வரலாற்று வடுவாகத்தான் இருந்துகொண்டுதான் இருக்கும். அதற்காக அடுத்த தலைமுறைகள் பலிவாங்க நினைத்தால் அது முட்டாள்தனம்.

கமல் தேவர்மகன் படத்தில் சொல்ல முற்பட்ட கதை கூட இதுதான். ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கொல்வது, அடுத்த தலைமுறை அதற்கு பலி தீர்ப்பது. பிறகு நீதிமன்றத்திற்கும், வழக்கரிஞர்களுக்கும் இவர்கள் விவசாயத்தில் சம்பாதித்ததையெல்லாம் கொண்டுசென்று கொட்டுவது என்று தான் ஒருகாலத்தில் தென்மாவட்டங்களில் சில சமூகங்கள் இருந்தன. இன்றைய படித்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதை உணரத்தொடங்கியுள்ளது.
ஆனால் சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக மீண்டும் அவர்களை திசை திருப்ப முயன்று கொண்டிருக்கின்றன. அதே போலத்தான் சில வலைப்பதிவாளர்களும், மற்ற சாதிக்காரர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் மேல் தங்களின் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கிய்மான விசயம் அல்ல. இதனால் பிரிவினை மேலும் அதிகமாகுமே தவிர குறையாது.

எதற்கெடுத்தாலும் கைபர், பொலன் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததை கூறிக்கொண்டிருப்பது நல்லவிசயமல்ல. அவர்கள் செய்ததற்கு இப்போது உள்ள மக்கள் என்ன செய்யமுடியும். வேற்றுமைகளை குறைக்க என்ன வழி என்பதைப்பற்றிய விவாதம் தான் இருக்கவேண்டுமே தவிர, மற்றவர்களை குறைகூறுவதாக விவாதங்கள் அமையக்கூடாது. இதை
நாகரீகமாக எதிர்த்தால், உடனே தனி மனித தாக்குதல்களுக்கு தயாராகிவிடுகிறார்கள். அந்த சமயத்தில் நம்முடைய உணர்ச்சிகளும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. சில சமயங்களில் அவ்வாரு நடந்ததற்காக நம்மை நினைத்து வேதனைப்படத்தான் முடிகிறது.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்."

குறள் படிக்கமட்டும் அல்ல, அது காட்டும் நெறிமுறைகளின் படி வாழ்ந்துகாட்டவும்தான். குறளோவியம் எழுதியவர்களுக்கு இது தகுமோ இல்லையோ, ஆனால் மனிதத்தன்மையுள்ள ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய விசயம்.


நம்மூர் பெப்ஸி தயாரிக்கும் முறைகள்!

நண்பர் வீரா அவர்கள், தினமும் எனக்கு சில படங்களுடன் கூடிய செய்திகளை இமெயிலில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

அவர் நம்நாட்டில் சில இடங்களில் தயாரிக்கப்படும் போலி குளிர்பானங்களை படங்களுடன் அனுப்பி இருந்தார். இதற்கு முன்பு தமிழ்மணத்தில் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இதோ உங்களுக்காக...

WATCH IT BEFORE YOU GULP IT!!!!!!!

Please forward this mail to as FEW as possible ......................
Great boy picking the colors to prepare the
PEPSI



Men at work - washing the bottles




Men at work washing the bottles Fully



Boys placing the bottles in the tray



Boy filling the PEPSI Soooooo... called



Boy filling the PEPSI & checking for the air bubles



Boy filling the Gas in the bottels



Boy searching for the right caps



Great man at capping the bottel



Quality checking and Success****



Don't say now Yeh Dil Mange More!!!!!




REEBOK's OFFICIAL CAR






Saturday, May 20, 2006

செருப்புகள் பலவிதம்!

நம்மில் பலர், மற்றவர்களை திட்டுவதற்கு, நம்மைத்தாங்கும், தான் கஷ்டப்பட்டு நம்முடைய நலனைக் காப்பாற்றும் செருப்பை பயன்படுத்துவோம். "செருப்பால அடிப்பேன்!" என்று பிள்ளைகளை திட்டுபவர்கள், "உங்களையெல்லாம் காப்பாத்த செருப்பா தேய்ஞ்சோமடா!" என்றும் கூறுவார்கள். நம்மைக்காக்கும் செருப்புகள் கேவலமானவையா என்றால், நிச்சயமாக இல்லை. சாக்கடை என்ற ஒரு வடிகால் இல்லையென்றால் ஊர் நாறிவிடும். நீங்கள் கேவலமாக நினைக்கும் உபாதை உங்கள் உடலில் இருந்து இரண்டு, மூன்று நாட்கள் வெளியேரவில்லையென்றால் உங்கள் உடம்பு என்னாகும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அப்படியானால் உலகில் கேவலமான விசயம் எது என்றால் ?, அட அது நம்ம மானிட ஜென்மம் தான். நமக்கு உதவும் மற்றவற்றை கேவலமாக நினைக்கும் நாம் தான் கேவலம்.

சரி விசயத்திற்கு வருவோம். கால்ல போடுற செருப்புக்கு இவ்வளவு செலவு செய்யனுமா?. தங்கத்தில செருப்பு செய்தாலும் அதை வீட்டுக்குள்ள போட்டு நடக்கமுடியுமா? என்றெல்லாம், நம்மால் நினைக்க்கப்படும் இந்த செருப்புக்கு மரியாதை கொடுத்து வித,விதமாக தயாரிக்கப்பட்டுள்ள செருப்புகளைப்பாருங்கள். ஹலோ! ஹலோ! கொஞ்சம் பொருங்கள், நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. சத்தியமா இது ஜெயலலிதாவின் செருப்புகள் இல்லீங்க!

ஒரு நண்பர் இமெயில் மூலம் எனக்கு வெறும் படமாக மட்டும் அனுப்பியவை!.


































மன்னிக்கவும், சொல்ல மறந்துட்டேன். இது லேடிஸ் ஸ்பெஷல்!.

Friday, May 19, 2006

பன்னாட்டு நிறுவனகள் ரூ.2500 கோடி வரி ஏய்ப்பு - மத்திய அரசு!

இந்தியாவில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்துள்ள வரி ஏய்ப்பு ரூ.2500 கோடி என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது!

மக்களவையில் வரி ஏய்ப்பு குறித்து பேசிய நிதியமைச்சக துணை அமைச்சர் எ.எ. பழனிமாணிக்கம் 2005-06 நிதியாண்டில் மட்டும் வரி ஏய்ப்பு செய்ததாக 411 பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பப்படுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தியாவில் தற்பொழுது 1915 பன்னாட்டு நிறுவனகள் இயங்கி வருகின்றன. இவைகள் நேரடியாக செய்த வரி ஏய்ப்பின் அளவே ரூ.2500 கோடிக்கும் அதிகம் என்று கூறிய பழனி மாணிக்கம் மறைமுக வரியில் இவைகள் ஏமாற்றியிருப்பதை கணக்கில் எடுத்தால் அது இதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறினார். 2004-05 நிதியாண்டில் 326 நிறுவனகளின் மீது வரி ஏய்ப்பு செய்ததாக தாக்கீது அனுபபட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.



நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துகிறேன் என்கிற பெயரில் ,கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தொலைநோக்குப்பார்வையில்லாமல் கண்டவனையும் உள்ளே விடுவதுதான் நம் பொருளாதார மேதையான நிதி அமைச்சர் மற்றும் தயாநிதி மாறன் போன்ற அமைச்சர்களில் தொழிலாகிப்போய்விட்டது. உள்ளே அனுமதித்ததுடன் அவர்களின் வேலை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்த சரியான துறை நம்மிடம் இல்லாதது இதுபோன்ற செயல்களில் அவர்களை ஈடுபட தூண்டுகிறது. அவர்களை கண்கானிப்பவர்களே, அவர்களுக்கு எப்படி வரி கொடுக்காமல் தொழில் நடத்துவது என்று கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். சுயநலத்துடன் நாட்டைக்காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்கள் இன்னும் நமது நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டிக்கொடுக்கும் மத்திய அமைச்சர்கள் இருக்கும் போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இதே நிறுவனங்கள் மற்ற வளரும் , வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற மெத்தனத்துடன் நடந்துகொள்ள முடியுமா?

சீனாவால் புறந்தள்ளப்பட்ட ஒரு இரும்பு ஆலைக்கு இந்தியாவில் ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு இன்று அவர்கள் ஒரிஸாவில் தொழிற்சாலை அமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சீனாவும் வெளி நாட்டு நிறுவனங்களை வரவேற்கிறது. ஆனால் அவர்களால் தங்கள் நாட்டின் கணிம வளங்கள் மற்றும் இயற்கை ஆதாரங்கள் சுரண்டப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால் இந்தியா அப்படி இல்லை, தொழில் வளம் பெருக்குகிறேன், வேலை வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் சரியான ஆய்வு மற்றும் முறையான சட்டதிட்டங்கள் இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர், நமது தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமான, தாமிரபரணி ஆற்று நீரில் ஒரு புகழ்பெற்ற ஒரு வெளிநாட்டி குளிர்பான நிறுவனம் கைவைக்கப்பார்த்தது அணைவரும் அறிந்ததே!. இன்னும் அவர்களின் செயல்பாடுகள் மறைமுகமாக அங்கு நடந்துகொண்டுதான் இருப்பதாக கேள்வி!.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மையென்றாலும். ஆண்டுகள் செல்லச்செல்ல நமக்கும் மிஞ்சுவது அவர்கள் கொடுக்கும் சம்பளமாக மட்டும் தான் இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அவர்களின் தேசத்திற்கு எடுத்துச்செல்லலாம் , உற்பத்தியில் குறிப்பிட்ட அளவு இங்குதான் வியாபாரம் செய்யவேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் , அவைகள் எங்கே முறையாகப்பின்பற்றப்படுகின்றன.

நம் தாயகத்தின் மதிப்பற்ற இயற்கை வளத்தை, போற்றிப்பாதுகாத்து , அதை பெருக்காவிட்டாலும் பரவாயில்லை , அவைகளை அந்நியரிடத்தில் இழத்துவிடாமல் நம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

Monday, May 15, 2006

அரசு பள்ளிகளில் இந்தி மொழியின் அவசியம்!

நேற்று தரன் அவர்கள் தன்னுடைய பதிவில், "கலைஞர், அண்ணா தடுத்ததால் தான் இவர்களால் இந்தி படிக்கமுடியாமல் போய்விட்டதா? அவர்கள் இந்தி கட்டாயமாவதைத்தான் எதிர்த்தார்கள். இவர்களுக்கு இந்தி படிக்கவேண்டும் என்றால் தனியாக படித்துக்கொள்ளலாமே!" என்று தெரிவித்திருந்தார். அதை பலர் வரவேற்றும் இருந்தனர். ஆனால் இது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

இந்தியாவைத்தவிர மற்ற மாநிலங்களில், பள்ளிகளில் தாய்மொழியோடு ஒரு தேசிய மொழியும், சர்வதேச தொடர்பு மொழியாக ஆங்கிலமும், கற்றுக்கொடுக்கப்படுகிறது. மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்வதற்கே!. வேற்று மொழியில் உள்ள நல்ல விசயங்கள் நமக்கு தெரியவேண்டுமானால் அந்த மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நல்ல தகவல்களை ( information sharing) பரிமாரிக்கொள்வதில் இது மிகவும் அவசியமாகிறது. நமது ஊரிலேயே தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள், வேற்று மொழியாக ஆங்கிலத்தை மட்டுமே கற்றுக்கொள்கின்றனர். ஆனால் பேசிப்பழகாததால் , தேவைப்படும் நேரத்தில் அவர்களால் அதை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

தரன் சொல்லுவது போல "பள்ளிகளில் இந்தி இல்லையென்றால் என்ன நீங்களே கற்றுக்கொள்ளுங்களேன்!" என்பது சொல்லுவதற்கு வேண்டுமானால் நன்றாக , நியாயமாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.

தரன் தனது பதிவில் டைடல் பார்க்கையும் , பெங்களூரையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டார். தொழில் என்பது தகவல் தொழிநுட்பம் மட்டும் அல்ல என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாமமில்லை.

இன்று அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லுபவர்களில் 70 சதவீததிற்கு மேற்பட்டவர்கள் கிராமத்தில் இருந்து செல்பவர்கள்தான். அவர்களில் பலர், பள்ளி இறுதி வகுப்புவரை கூடப்படிக்காதவர்கள், சிலர் ITI மற்றும் diploma படித்தவர்கள். அவர்கள் கிராமங்களில் படிக்கும் போது தமிழ்தவிர மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படிப்பட்டவர்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் போது அந்த நாட்டவர்களுடன் சரிவர தொடர்பு கொள்ளமுடியாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது மிகவும் வேதனைக்குறியது. அங்கு சென்று பார்க்கும் போது தான் மற்ற மொழிகளை கற்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு தெரிகிறது. திறமையிருந்தும் கூட அவர்களால் அதை வெளிக்காட்ட முடியாமல் கீழ்மட்ட அளவிலேயே பெரும்பகுதி நாட்களை கழிக்கவேண்டியதாயுள்ளது.

இந்தி, ஆங்கிலத்தை விட மிக எளிதான மொழிதான். பள்ளியில் படிக்கும் போதே அதை ஒரு மொழியாக கற்றிருந்தால் அது அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்திருக்கும். கிராமத்தில் இருப்பவர்களுக்கும், நகரத்தில் உள்ள வசதியற்றவருக்கும் அரசு பள்ளிகளில் கிடைக்கும் இலவச கல்விதான் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவது. அங்கு இது போன்ற வாய்ப்புகளை தடை செய்வது மிக ஒரு சமுதாய அழிவிற்கு அடிக்கல் நாட்டுவது போன்றதாகும். என்வே தான் அரசு பள்ளிகளில் இந்தி போன்ற ஒரு தேசிய மொழியை, ஒரு மொழியாக கற்றுக்கொள்ளவேண்டியது மிக அவசியமாகிறது.

தமிழகத்தில் படிக்கும் அணைவருக்கு இங்கேயே வேலை கிடைத்துவிடப்போவதில்லை. வேலை கிடைக்காத எல்லோருக்கும் வெளிநாட்டு வேலையும் கிடைத்துவிடப்போவதில்லை. இங்கு படிக்கும் சில் தொழில்கல்வி படிப்புகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அங்கு வேலைக்கு செல்லும் பலர் அவர்களோடு சரிவர கலந்துரையாட முடியாமல் அவதிப்படுறார்கள். அவர்களின் வேதனை அனுபவித்தால் தான் தெரியும். தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் கூட மற்ற வீரர்களுடன் சரிவரப்பழக முடியாமல், மந்தையில் இருந்து பிரிந்த ஆடுபோல இருக்கவேண்டியுள்ளது. இதை சில வீரர்களுடைய பேட்டியில் இருந்தே நீங்கள் அறிந்துகொள்ளலாம். மத்திய அரசுப்பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நம் மக்களின் நிலையும் இதுதான். மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு நம்மைப்போன்ற ஆங்கில் அறிவு இல்லையென்றாலும், தேசிய மொழி தெரிந்திருப்பதால், திறமையிருந்தும் நம்மவர்களால் அவர்களுடன் போட்டிபோட முடிவதில்லை.


பல வெளிநாடுகளில் வாழும் நாம் மக்கள் (இந்தியர்கள்) தங்களுக்குள்ளாக ஆங்கிலத்தில் பேசினால் அவர்களில் ஒருவர் நிச்சயமாக தமிழனாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது வெட்கக்கேடான விசயம்தான். இதெற்கெல்லாம் காரணம் தாய் மொழியாம் நம் அழகு தமிழை வளர்ப்பதாக கூறி, நம்மை ஆண்டவர்களின் மொழி வெறியும். அதைவைத்து அவர்கள் செய்த அரசியலும் தான்.

தமிழை வளர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால் இவர்களின் போராட்டம் தமிழை வளர்ப்பதை விட வேற்று மொழிகள் மீதான வெருப்பை வளர்ப்பதாகவே இருந்தன என்றால் அது மிகையாகாது. இவர்களின் போராட்டங்களால், வேற்றுமொழிகளின் மீதும், அந்த மொழி பேசுபவர்களின் மீதும் ஒருவித வெருப்பு ஏற்பட்டதே தவிர நம் தாய்மொழி ஒன்றும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை. இன்னும் தமிழ்நாட்டில் பல பள்ளிகளின் வாளாகங்களில் தமிழ் தடைசெய்யப்பட்ட மொழியாகத்தான் இருக்கிறது. நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் கூறியுள்ளது போல "உங்கள் வெற்றியானது மற்றவர்களின் தோல்வி மட்டும் அல்ல. ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடி வெற்றிபெறவேண்டிமேயன்றி முன்னால் ஓடுபவர்களின் கால்களுக்கு இடையில் கம்பை விட்டு அவர்களை கீழெ விழச்செய்து நீங்கள் வெற்றிபெறக்கூடது. நம் அழகு தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து திட்டங்களை வகுத்து, அதன் அருமையை ஒவ்வொரு தமிழனும் உணரும்படி செயல்படவேண்டுமே தவிர மற்றவர்களை குறைகூறிக்கொண்டும் மற்ற மொழிகளை குறைகூறிக்கொண்டும் இருக்கக்கூடாது."






Saturday, May 13, 2006

தேர்தல் முடிவுகள் கூறும் பாடங்கள்!

தேர்தல் அறிவிப்பிற்கு முன் அதிமுக ஓரளவுக்கு வெற்றிபெறும் நிலையில் தான் இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்க, நெருங்க அதன் நிலை கொஞ்சம், கொஞ்சமாக மாறியது. இதற்கு காரணம் முறையான பிரச்சார வியூகம் இல்லாததே!. 1996 - 2001 வரை ஓரளவுக்கு பெரிய தவறுகள் ஏதும் செய்யாமல் ஆட்சி செய்த திமுக-வினால், இப்போது அதிமுக பெற்ற தொகுதிகளை விட குறைவான தொகுதிகளே 2001 தேர்தலில் பெற முடிந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

குறிப்பாக பசிக்காக துரத்தும் விலங்குகளை விட, உயிருக்காக பயந்துஓடும் விலங்குகளிடம் வேகமும் ஒரு துடிதுடிப்பும் இருக்கும். இந்த தேர்தலும் அப்படித்தான். ஆட்சிப்பொறுப்பில் இருந்த அதிமுகவால் சரியான முறையில் பிரச்சார வியூகம் அமைத்துச் செயல்படவில்லை. ஆனால் இந்த தேர்தல் திமுக-விற்கு வாழ்வா , சாவா போராட்டமாகத்தான் இருந்தது. எனவேதான் மத்தியில் தனக்கு இருந்த செல்வாக்கையும், மாநிலத்தில் தனக்கு இருந்த ஊடக செல்வாக்கையும் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு பயன்படுத்தி இந்த வெற்றியை பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது.

சிலேடையாக பேசுவதால் மட்டும் ஓட்டு கிடைத்துவிடாது என்பதை உணர்ந்து கொண்ட கருணாநிதி எல்லோருக்கும் முந்திக்கொண்டு , ஓட்டுப்போடும் பாமர மக்களை கவரும் வகையில் பல இலவசங்களுடன் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆனால் எந்த தொலைநோக்குப்பார்வையும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த இலவச திட்டங்களால், நம் தமிழகத்தின் பொருளாதாரம் எவ்வாரெல்லாம் பாதிக்கப்படப்போகிறது, இதெல்லாம் சாத்தியமா என்று கேள்வி எழுப்பி, தன் ஆட்சியில் அவர்கள் செய்த பொருளாதார சீர்திருத்தங்களால் தமிழகத்தின் பொருளாதார நிலை எப்படியுள்ளது என்பதைப் பற்றிய சரியான பிரச்சாரம் அதிமுக-விடம் இல்லாமல் போனது.

திமுக அறிவித்த பல சாத்தியமில்லாத, சுயநல நோக்கோடு உள்ள இலவச திட்டங்களை, வைகோ கடுமையாக விமர்சித்துக்கொண்டு இருக்கும் போது, அதற்கு மேலும் வலுச்சேர்க்காமல் , மேலும் பல இலவசங்களை ஜெயலலிதா அறிவித்தது, வைகோ-வை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளியது. கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கின்ற இவ்வேளையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஆதரிக்கும் சூழ்நிலைக்கு வேறுவழியின்றி தள்ளப்பட்டார் வைகோ?. இதனால் மற்ற கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளானார்., அதிமுக தேர்தல் அறிக்கைகள் அணைத்தும் எங்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என திமுக-வும் , தேமுதிக-வும் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாவின் கடைசிக்கட்ட அறிவிப்புகள் வசதியாகப்போய்விட்டது.

தேமுதிக -விற்கு கிடைத்த பல ஓட்டுகள், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு விழவேண்டிய ஓட்டுகளேயாகும். அவருக்கு வாக்களித்த பாமர மக்கள பலர் பல இதுவரை ஆதிமுக விற்கு வாக்களித்து வந்தவர்களே. கருனாநிதி எதிர்ப்பு அதிமுக -விற்கு சாதகமாகாமல் தேமுதிக-விற்கு சாதகமானதும் இந்த தேர்தலில் அதிமுக-விற்கு ஏற்பட்ட மற்றுமொரு பின்னடைவாகும்.

எம்ஜியார் இருந்தவரை , தமிழக பாமர மக்களிடம் , கருனாநிதி ஒரு துரோகி, நயவஞ்சகர், சூழ்ச்சிக்காரர் என்பது போன்ற ஒரு இமேஜை ஏற்படுத்தி வைத்திருந்தார். அதோடு ஆரம்பத்தில் அவர் கருனாநிதியை எதிர்த்த அளவிற்கு பிற்காலங்களில் அவர் எதிர்க்கவில்லை. மாறாக கருனாநிதி எம்ஜியாரை அவர் சாகும் வரை விமர்சித்துக்கொண்டுதான் இருந்தார். இது மக்களிடையே கருனாநிதிக்கு ஒரு எதிர்மாறான நிலையையே வைத்திருந்தது. ஆனால் இப்போது ஜெயலலிதா அதுபோன்ற ஒரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தவறிவிட்டார்.

ஜெயலலிதா , தன்னுடைய ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி மற்றவர்களை வளரவிடாமல் செய்து கொண்டிருந்ததால், பிரச்சாரத்திற்கு இவரை மட்டுமே இவருடைய கட்சி நம்பவேண்டிய சூழல் இருந்தது. ஆட்சியில் இருந்த போது ஓரளவுக்கு திறமையான அரசு அதிகாரகளை உடன் வைத்திருந்த ஜெயலலிதா, கட்சியில் அப்படி ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்ளாமல் போனதும் அவர் செய்த மிகப்பெரிய தவறு. தன்னை மிஞ்சி விடுவார்களோ, அல்லதும் துரோகம் செய்து விடுவார்களோ என்கிற பயம் தான் அதற்கு காரணம். ராஜாஜி தன் மேல் வைத்த நம்பிக்கையை பிறர் மேல் வைக்காததால் தான் அவரால் மக்கள் செல்வாக்குமிக்க மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவாக முடியவில்லை. ஆனால் காந்தி தன்னை நம்புவதை விட மற்றவர்களை அதிகம் நம்பினார். அந்த நம்பிக்கைதான் அவர் பின்னால் இந்தியாவே அணிவகுக்க வைத்தது.

இந்த தேர்தலில் திமுக வென்றாலும், அதற்கு இது மலர் கிரீடம் இல்லை. முற்கிரீடம் தான். ஏனென்றால் நம் மக்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை ஒருவருடத்திற்குள்ளாகவே எதிர்பார்ப்பார்கள். ஒரு 10 அல்லது இருபது வருடங்களுக்கு முன் தெர்தல் அறிக்கை என்பது படித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியவகையில் இருந்தது. ஆனால் இவர்கள் தங்களின் ஊடகங்கள் மூலம் பட்டி, தொட்டியெங்கும் அதை பரப்பிவிட்டார்கள், தேர்தல் சமயத்திலேயே கணக்கெடுப்பிலும் ஈடுபட்டுவிட்டார்கள். எனவே மக்கள் இவர்களின் அறிக்கையில் சொன்ன சலுகைகளை மிக விரைவில் எதிர்பார்ப்பார்கள். சலுகைகள நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிகை இழக்க வாய்ப்புள்ளது. அப்படி நிறைவேற்றும் பட்சத்தில், இந்த சலுகைகளால் கட்சிக்காரர்கள் மத்தியிலும், அரசு ஊழியர்கள் மத்தியிலும் லஞ்சம் கரைபுரண்டு ஓடும் என்பது மட்டும் நிச்சயம். அதுவும் இந்த ஆட்சிக்கு கெட்டபெயரைத்தான் வாங்கிகொடுக்கப்போகிறது.


இந்த தேர்தலில் மதிமுக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும். அரசியல் ரீதியாக இது அவர்களுக்கு கிடைத்த வெற்றிதான். ஏனென்றால் அதிமுக வென்றாலும், சில மாதங்களிலேயே மதிமுக எதிர்கட்சிகளின் வரிசையில் அமரக்கூடிய சூழ்நிலைதான் உருவாகும். இது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றுதான். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒரு எதிர்கட்சியாக திமுக-வின் ஓசை இருக்கும் அளவிற்கு மதிமுக-வின் ஓசை இருக்காது. எதற்கெடுத்தாலும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான கருனாநிதியுடன் கூடி முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலைதான் உருவாகும். அது மதிமுக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இப்போது திமுக-விற்கு எதிர்கட்சியாக அமரப்போகும் இவர்கள், அதிமுக-வை விட ஒரு எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட முடியும். அதனால் தங்களுடைய நிலையை தமிழகத்தில் வலுப்படுத்திக்கொள்ள முடியும். எனவே அரசியில் ரீதியாகப்பார்த்தால் இது அவர்களுக்கு வெற்றிதான்.

தேமுதிக-விற்கு மக்களிடைய உள்ள ஆதரவு தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி மேல் மக்களுக்கு உண்டான வெறுப்பையே காட்டுகிறது. இந்த பலத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால், அக்கட்சி உள்ளூர் பிரச்சனைகளுக்கு அக்கட்சி முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து போராடவேண்டும். கட்சியை தொய்வில்லாமல் கொண்டு செல்ல மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து போராட திட்டங்களை வகுக்கவேண்டும். ஊடகங்களிடம் நல்ல உறவு வைத்துக்கொள்வது மிக அவசியம். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள தலைவர்களுக்கும், இரணடாம்கட்ட தலைவர்களுக்கும் மக்களிடையே நல்ல அறிமுகம் வேண்டும். இதை விடுத்து தேர்தலுக்கு தேர்தல் மட்டும் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தால், விஜய டி ராஜேந்தரின் நிலைதான் தேமுதிக-விற்கும் ஏற்படும்.

Thursday, May 11, 2006

தொகுதிவாரியாக வெற்றிபெற்றவர்கள் பட்டியல்.

வியாழக் கிழமை 11 மே, 2006 08:33...ல் சுருக்க விவரம்

சட்டமன்றத் தொகுதிகளின் விவரங்கள்

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்

234

தேர்தல் நடைபெறும் சட்டமன்றத் தொகுதிகள்

234

தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்ற சட்டமன்றத்தொகுதிகள்

152


வாக்காளரும் வாக்களித்தோரும்

மொத்த வாக்காளர்கள்

46603827

வாக்குச் சாவடிகள் 51659

வாக்குப்பதிவு விழுக்காடு

70.72


வேட்பாளர்களின் எண்ணிக்கை

வேட்பாளர்களின் எண்ணிக்கை
கட்சிகள்

மாநிலம்
கட்சிகள்

மாநிலக் கட்சிகள்-
Other States

மற்ற பதிவுசெய்யப்பட்ட கட்சிகள்.
கட்சிகள்

சுயேட்சை வேட்பாளர்கள்

மொத்த வேட்பாளர்கள்

472

386

199

307

1222

2586



சின்னம் கட்சி தொகுதிகள்
போட்டியிட்டோர் வெற்றி

இந்திய தேசிய காங்கிரஸ் 47 24

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்ட்) 12 5

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 9 4

பாரதிய ஜனதா கட்சி 203 0

பகுஜன் சமாஜ் கட்சி 146 0

தேசியவாத காங்கிரஸ் 12 0

திராவிட முன்னேற்றக் கழகம் 114 65

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 171 35

பாட்டாளி மக்கள் கட்சி 28 14

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 30 2

.

அனைத்திந்திய பார்வடு பிளாக் 57 0

.

சமாஜ்வாதி கட்சி 54 0

.

ஜனதா தள் (ஐக்கியம்) 29 0

.

லோக் ஜனசக்தி கட்சி 25 0

.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை) 9 0

.

ராஷ்ட்ரிய லோக்தள் 6 0

.

புரட்சிகர சமூகவாதக் கட்சி 2 0

.

ஜனதா தள் (மதசார்பற்றது) 1 0

.

மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் 1 0

.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 2

.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 208 1

.

தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் 16 0

.

அகில பாரத் ஹிந்து மகாசபை 9 0

.

புதிய நீதி கட்சி 4 0

.

பாரதிய திராவிட மக்கள் கட்சி 3 0

.

இந்தியன் ஜஸ்டிஸ் கட்சி 3 0

.

யுனைடெட் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 0

.

ஜனதா கட்சி 3 0

.

அகில இந்திய வள்ளலார் பேரவை 2 0

.

சக்தி பாரத தேசம் 2 0

.

லோக் பரித்ரன் 2 0

.

விவசாயி அன்பு கட்சி 2 0

.

அகில இந்திய பார்வட் பிளாக் (சுபாஸிஸ்ட்) 1 0

.

இந்தியன் வெற்றி கட்சி 1 0

.

ஜபமணி ஜனதா 1 0

.

தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் 1 0

.

சுயேட்சை 1088 0

மொத்தம்

2313 152


List of Successful Candidates - Tamilnadu

AC No AC Name Candidate Name Party
1 Royapuram JAYAKUMAR,D. ADMK
2 Harbour ANBAZHAGAN, K. DMK
3 Dr. Radhakrishnan Nagar SEKAR BABU, P.K. ADMK
4 Park Town
5 Perambur
6 Purasawalkam
7 Egmore PARITHI ELLAMVAZHUTHI DMK
8 Anna Nagar
9 Theagaraya Nagar
10 Thousand Lights
11 Chepauk
12 Triplicane
13 Mylapore
14 Saidapet
15 Gummidipundi VIJAYAKUMAR.K.S ADMK
16 Ponneri BALARAMANAN.P ADMK
17 Thiruvottiyur
18 Villivakkam
19 Alandur ANBARASAN, T. M DMK
20 Tambaram
21 Tirupporur MOORTHY, D PMK
22 Chengalpattu ARUMUGAM, K PMK
23 Maduranthakam GHAYATHRI DEVI, K INC
24 Acharapakkam SANKARA VALLI @ SANKARI NARAYANAN DMK
25 Uthiramerur SUNDAR,K DMK
26 Kancheepuram KAMALAMBAL, P PMK
27 Sriperumbudur YASODHA, D INC
28 Poonamallee SUDARSANAM.D INC
29 Tiruvallur SHIVAJI. E.A.P DMK
30 Tiruttani
31 Pallipet RAMAN. E.S.S INC
32 Arkonam JAGANMOORTHY.M DMK
33 Sholinghur ARUL ANBARASU,D INC
34 Ranipet GANDHI,R DMK
35 Arcot ELAVAZHAGAN.K.L PMK
36 Katpadi
37 Gudiyatham
38 Pernambut
39 Vaniayambadi
40 Natrampalli
41 Tiruppattur
42 Chengam POLUR VARADHAN M INC
43 Thandarambattu VELU E.V DMK
44 Tiruvannamalai PITCHANDI K DMK
45 Kalasapakkam KRISHNAMURTHY-AGRI S.S ADMK
46 Polur VIJAYAKUMAR P.S INC
47 Anaicut
48 Vellore
49 Arni SIVANANDAM. R DMK
50 Cheyyar
51 Vandavasi
52 Peranamallur
53 Melmalayanur SENTHAMIZHSELVAN.P PMK
54 Gingee KANNAN.V DMK
55 Tindivanam SHANMUGAM. C.VE. ADMK
56 Vanur GANAPATHY.N. ADMK
57 Kandamangalam PUSHPARAJ. S DMK
58 Villupuram PONMUDY.K DMK
59 Mugaiyur KALIYAVARATHAN.V.A.T PMK
60 Thirunavalur
61 Ulundurpet THIRUNAVUKARASU.K DMK
62 Nellikuppam RAJENDRAN.SABA. DMK
63 Cuddalore IYAPPAN.G. DMK
64 Panruti VELMURUGAN.T. PMK
65 Kurinjipadi PANNEERSELVAM.M.R.K. DMK
66 Bhuvanagiri SELVI RAMAJAYAM ADMK
67 Kattumannarkoil RAVIKUMAR.D. VCK
68 Chidambaram ARUNMOZHIDEVAN.A. ADMK
69 Vridhachalam VIJAYAKANTH.A. DMDK
70 Mangalore
71 Rishivandiam
72 Chinnasalem UDHAYASOORIYAN. T DMK
73 Sankarapuram
74 Hosur GOPINATH.K INC
75 Thalli
76 Kaveripattinam
77 Krishnagiri SENGUTTUVAN T DMK
78 Bargur THAMBIDURAI M ADMK
79 Harur DILLIBABU.P CPM
80 Morappur MULLAIVENDHAN.V DMK
81 Palacode
82 Dharmapuri
83 Pennagaram
84 Mettur
85 Taramangalam
86 Omalur
87 Yercaud
88 Salem-I
89 Salem-II
90 Veerapandi
91 Panamarathupatty
92 Attur SUNDARAM M R INC
93 Talavasal
94 Rasipuram RAMASWAMY.K.P DMK
95 Sendamangalam PONNUSAMY.K DMK
96 Namakkal JAYAKUMAR.K INC
97 Kapilamalai NEDUNCHEZHIAN.K PMK
98 Tiruchengode THANNGAMANI.P ADMK
99 Sankari DURAISAMY.V.P DMK
100 Edapadi
101 Mettupalayam
102 Avanashi
103 Thondamuthur
104 Singanallur CHINNASWAMY.R. ADMK
105 Coimbatore West MALARAVAN.T. ADMK
106 Coimbatore East PONGALUR PALANISAMY.N. DMK
107 Perur
108 Kinathukkadavu
109 Pollachi
110 Valparai
111 Udumalpet
112 Dharapuram
113 Vellakoil SAMINATHAN.M.P DMK
114 Pongalur
115 Palladam
116 Tiruppur
117 Kangayam SEKAR.S INC
118 Modakurichi PALANISAMI.R.M INC
119 Perundurai PONNUDURAI.C ADMK
120 Erode RAAJA.NKK.P DMK
121 Bhavani K V RAMANATHAN PMK
122 Andhiyur GURUSAMY.S DMK
123 Gobichettipalayam SENGOTTAIYAN.K.A ADMK
124 Bhavanisagar SUBRAMANIAM.O DMK
125 Sathyamangalam DHARMALINGAM.L.P DMK
126 Coonoor SOUNDARAPANDIAN,A DMK
127 Ootacamund GOPALAN.B INC
128 Gudalur RAMACHANDHIRAN,K DMK
129 Palani
130 Oddanchatram
131 Periyakulam
132 Theni
133 Bodinayakkanur LAKSHMANAN S DMK
134 Cumbum ERAMAKRISHNAN N MDMK
135 Andipatti JAYALALITHAA J ADMK
136 Sedapatti
137 Thirumangalam
138 Usilampatti
139 Nilakottai THENMOZHI .S. ADMK
140 Sholavandan
141 Tirupparankundram
142 Madurai West
143 Madurai Central
144 Madurai East BOOMINATHAN.M MDMK
145 Samayanallur TAMILARASI.R DMK
146 Melur SAMY.R ADMK
147 Natham VISWANATHAN.R ADMK
148 Dindigul BALABARATHI.K CPM
149 Athoor PERIASAMY.I DMK
150 Vedasandur
151 Aravakurichi KHALEELUR RAHMAN.M.A. DMK
152 Karur
153 Krishnarayapuram
154 Marungapuri CHINNASAMY.C ADMK
155 Kulithalai
156 Thottiam
157 Uppiliapuram
158 Musiri
159 Lalgudi
160 Perambalur
161 Varahur CHANTHIRAKASI.M ADMK
162 Ariyalur AMARAMOORTHY.D INC
163 Andimadam
164 Jayankondam RAJENDRAN.K ADMK
165 Srirangam
166 Tiruchirapalli-I
167 Tiruchirapalli-II
168 Thiruverambur
169 Sirkali
170 Poompuhar
171 Mayuram
172 Kuttalam
173 Nannilam PADMAVATHY .P CPI
174 Tiruvarur MATHIVANAN. U DMK
175 Nagapattinam
176 Vedaranyam
177 Tiruthuraipundi ULAGANATHAN .K. CPI
178 Mannargudi SIVAPUNNIYAM . V CPI
179 Pattukkottai
180 Peravurani VEERAKAPILAN.M.V.R ADMK
181 Orathanad
182 Thiruvonam
183 Thanjavur
184 Tiruvaiyaru
185 Papanasam DORAIKKANNU.R ADMK
186 Valangiman
187 Kumbakonam MANI.KO.SI DMK
188 Thiruvidamarudur
189 Thirumayam
190 Kolathur
191 Pudukkottai
192 Alangudi
193 Arantangi
194 Tiruppattur PERIYAKARUPPAN.K.R DMK
195 Karaikudi SUNDARAM.N INC
196 Tiruvadanai RAMASAMY.K.R INC
197 Ilayangudi RAJAKANNAPPAN R.S DMK
198 Sivaganga GUNASEKARAN S CPI
199 Manamadurai GUNASEKARAN.M ADMK
200 Paramakudi RAMPRABHU.R INC
201 Ramanathapuram
202 Kadaladi THANGAVELAN.SUBA. DMK
203 Mudukulathur MURUGAVEL.K. DMK
204 Aruppukottai THANGAM THENNARASU DMK
205 Sattur
206 Virudhunagar
207 Sivakasi
208 Srivilliputhur
209 Rajapalayam
210 Vilathikulam CHINNAPPAN.P ADMK
211 Pottapidaram
212 Koilpatti
213 Sankaranayanarkoil KARUPPASAMY C ADMK
214 Vasudevanallur
215 Kadayanallur PETER ALPHONSE.S INC
216 Tenkasi
217 Alangulam POONGOTHAI ALADIARUNA DMK
218 Tirunelveli MALAI RAJA N DMK
219 Palayamcottai
220 Cheranmahadevi VELDURAI.P. INC
221 Ambasamudram
222 Nanguneri
223 Radhapuram APPAVU. M. DMK
224 Sattangulam
225 Tiruchendur
226 Srivaikuntam
227 Tuticorin
228 Kanniyakumari SURESH RAJAN.N DMK
229 Nagercoil RAJAN.A DMK
230 Colachel JEYAPAUL.S INC
231 Padmanabhapuram THEODARE REGINALD.T DMK
232 Thiruvattar LEEMA ROSE.R CPM
233 Vilavancode JOHN JOSEPH,G CPM
234 Killiyoor JOHN JACOB.S INC